விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கும்படியான இயக்குனரானார். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வந்த தானா சேர்ந்த கூட்டம் கூட ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் போடா போடி படம் எடுத்து முடித்த பிறகு மிகவும் வருத்தத்தில் இருந்துள்ளார், ஏனெனில் பட ரிலிஸ் தாமதம், அடுத்த வாய்ப்பு பற்றிய கவலைகள் இருந்ததாம்.
அந்த நேரத்திலிருந்து இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர் கௌதம் மேனன் தான் தனக்கு மிகவும் ஆதரவாகவும், பல உதவிகள் செய்ததாகவும் கூறியிஉள்ளார்.