நான் சிறை சென்றாலும் எனது தந்தை பிரதமராவதை தடுக்க முடியாது: நாமல் சூளுரை

324
நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு அல்ல என்னை சிறைக்கு அனுப்பினாலும், எனது தந்தை இந்நாட்டின் பிரதமராவதனை தடுக்க முடியாதென ஹம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச,

இளம் பெண்கள் கருக்கலைப்பு, 165000 போதைப்பொருள் மீட்பு என பத்திரிகையில் பெரிதாக பிரசூரிக்கப்பட்டுள்ளது. இவை தான் இன்று நாட்டிற்கு ஏற்பட்டுள்ள நிலைமை.

இவை மிகவும் ஆபத்தானவைகள், இளம் தலைமுறை போதைப்பொருளில் மூழ்கடிப்பட்டுள்ளனர். வரலாற்றில் இந்த மாதத்திலேயே அதிகளவான எத்தனோல் கொண்டு வரப்பட்டுள்ளது. இவர்கள் நாட்டின் கலாச்சாரம் அழிக்கின்றார்கள்.

மிஹிது தேரர் எங்களுக்கு கற்று கொடுத்த கலாசாரம், புத்த மதம் போன்றவைகளை பாதுகாத்து எங்கள் சமூகத்தை முன்நோக்கி கொண்டு செல்ல வேண்டும்.

அவ்வாறு கலாச்சாரங்களை மதிக்கும் வகையில் எங்கள் பிள்ளைகளை வளர்க்க வேண்டும் எனவே எதிர்வரும் 17ஆம் திகதி வெற்றிலைக்கு வாக்களியுங்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE