நாமலின் நண்பிஅனுசிகா ரிஸ்னியின் திருட்டு அம்பலம்

196

namal-rajapaksa-400-seithy_mini

இலங்கையின் பிரபல பாடகர் ஹிராஜின் சகோதரி அனுசிகா ரிஸ்னி பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியை 2018இல் ஹம்பாந்தோட்டையில் நடாத்துவதற்கு மேற்கிந்தியதீவுகளின் கோதேவி தீவில் ஏற்பாடு செய்த ‘சென்ட் கிட்ஸ்’ என்ற நிகழ்ச்சிக்காக இலங்கையில் இருந்து மொடல் அழகிகளை அழைத்துச் சென்றுள்ளார்.

இந்த நிகழ்விற்கு சென்ற குறித்த யுவதிகளுக்கு பணம் வழங்கியுள்ள பற்றுச் சீட்டுக்கள் போலியானவை என்று தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் இது தொடர்பில்நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஹிராஜின் சகோதரி ரிஸ்னியின் ‘ரெட் செரி’ நிறுவனம் மூலமே குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்விற்காக இலங்கையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட மொடல் யுவதிகளுக்கு ஒரு மில்லியன் வீதம் வழங்கப்பட்டுள்ளமைக்கான பற்று சீட்டு ரிஸ்னியின் நிறுவனத்தின் பெயரில் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், அந்த யுவதிகளுக்கு வழங்கப்பட்ட பணம் இலங்கைக்கு வந்ததும் மீளவும் ரிஸ்னியால் பெறப்பட்டுள்ளதாகவும் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவின் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

ரிஸ்னி நாமல் ராஜபக்ஸவின் நெருங்கிய தோழி என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாமல் ராஜபக்ஸவுக்கு பல பாடகிகள் மற்றும் நடிகைகள் உள்ளிட்ட யுவதிகளுடன் தொடர்பு இருப்பதாக அவரது சகோதரர் அண்மையில் சிங்கள ஊடகம் ஒன்றிடம்தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE