நாளைய தினம் இலங்கைக்கு வருகிறார் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம்

109

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெற்றிசீயா ஸ்கொட்லான்ட் நாளை இலங்கை வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டே அவர் இலங்கைக்கு வரவுள்ளார்.

2016ஆம் ஆண்டு பதவியேற்ற பின்னர் ஸ்கொட்லான்ட், இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயமாக இது அமைகிறது.

இலங்கை வரும் ஸ்கொட்லான்ட், எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளார்.

இதனையடுத்து அவர், எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் உட்பட்ட அரசாங்க அமைச்சர்களையும் சந்திப்பார் என குறிப்பிடப்படுகிறது.

2018ஆம் ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் ஏற்றுக்கொண்ட விடயங்களின் பிரதிபலன்களுடன் தொடர்புபட்டதாகவே பெற்றிசீயா ஸ்கொட்லான்டின் விஜயம் அமையவுள்ளது.

SHARE