இடைக்கால வரவு – செலவு திட்டத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. அதனை பாராளுமன்றத்தில் சமர்பிக்க வேண்டியுள்ளது. நாளை வெள்ளிக்கிழமை பாராளுமன்ற அமர்வின் போது இடைக்கால வரவு – செலவு திட்டம் சமர்பிக்கப்படலாம் என காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
ஜனாதிபதி செயளகத்தில் இன்று வியாழக்கிழமை காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு பதவியினைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்த்தார்.