அதில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் அவர்கள் நாவலபிட்டிய பிரதேசத்தின் தோட்டங்களில் வாழுகின்ற மக்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்தார். அதன் போது புதிய அரசாங்கத்தின் தோட்ட மக்களுக்கான காணி வழங்கல் கொள்கையை எடுத்துக் கூறினார்.
தோட்ட மக்களுக்கான காணி வழங்கல் தொடர்பான கபினட் தீர்மானத்தின் படியும் 2016 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் படியும் தோட்ட மக்களுக்கான காணி வழங்கல் நடைபெற வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
எனினும் அது தொடர்பான எந்த நடவடிக்கையும் இதுவரையும் நாவலபிட்டிய பிரதேசத்தில் இடம்பெறவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
அதற்கமைய பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலே நாவலபிட்டிய பிரதேச தோட்ட மக்களுக்கான காணி வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.
அது மட்டுமன்றி கடியன்லேனை மற்றும் பார்கேபல் பிரதேசங்களில் சிறுத்தைகளின் நடமாட்டம் உள்ளதையும் சுட்டிக்காட்டினார். அதனால் பல பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதையே தவிர்த்து வருகின்றனர்.
இது தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டாலும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதாக இல்லை. அதனை சுட்டிக்காட்டி வன விலங்கு திணைக்களத்திடமிருந்து விசேட குழு துரிதமாக வருவிக்கப்பட்டு இப்பிரச்சினையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.
மற்றும் கலபொட தோட்ட மக்கள் எதிர்நோக்கும் கிராம அலுவலர் பிரச்சினை மின்சார பிரச்சினை புகையிரத கடவை பிரச்சினை தொடர்பாகவும் தீர்மானமெடுக்கப்பட்டது.
தோட்ட மக்களுக்கான காணி வழங்குவதை முன்னெடுப்பதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு தேவைப்படுகின்றது.
தரவுகளை திரட்டிக்கொள்வது மற்றும் கோவைப்படுத்திக்கொள்வது போன்ற அடிப்படை வேலைகளை சுயேட்ச்சையான முறையில் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
அதன்போதே இந் நடவடிக்கையை நாம் துரிதப்படுத்திக்கொள்ள முடியும். தொடர்ந்து வருகின்ற காலப்பகுதியில் ஏனைய பிரச்சினைகளையும் இனங்கண்டு தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.