லட்சுமி ராமகிருஷ்ணன் நடிகை, தொகுப்பாளர், இயக்குனர் என பல திறமைகளை கொண்டவர். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து அனைவரின் பாராட்டையும் பெற்ற படம் அம்மணி.
இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இவர் ‘நா.முத்துக்குமார் இழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாது, எத்தனை நல்ல பாடல்களையும், கவிதைகளையும் கொடுத்தவர்.
தன் உடல்நிலையை அவர் தான் பார்த்திருக்க வேண்டும், தற்போது கஷ்டப்படுவது அவருடைய குடும்பம் தான்.
இந்த விஷயத்தில் அவர் மீது எனக்கு கோபம் தான் வருகிறது’ என எமோஷ்னலாக பேசியுள்ளார்.