நிசாங்க சேனாதிபதியின் கருத்து தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் – மூன்று அமைச்சர்கள்:-

304

சர்ச்சைக்குரிய அவன்ட்கார்ட் நிறுவனத்தின் தலைவர் முன்னாள் மேஜர் நிசாங்க சேனாதிபதியின் கருத்து தொடுர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென மூன்று அமைச்சர்கள் கோரியுள்ளனர்.
காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோனிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களான ராஜித சேனாரட்ன, சம்பிக்க ரணவக்க மற்றும் அர்ஜூன ரணதுங்க ஆகியோர் எழுத்து மூலம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
தாம் மூன்று அமைச்சர்களுக்கு லஞ்சம் வழங்கியுள்ளதாகவும் மூன்று அமைச்சர்கள் நிராகரித்துள்ளதாகவும் நிசாங்க சேனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்தக் கருத்து தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமைச்சர்கள் கோரியுள்ளனர்.

SHARE