நித்திரை காரணமாக வாகனம் தடம்புரழ்வு

286

கிளிநொச்சி பரந்தன் றோமன் கத்தோலிக்க பாடசாலை முன்பாக இன்று அதிகாலை 01.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி சிறுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி விபத்தில் கப் ரக வானம் ஒன்றே தடம்புரண்டுள்ளதுடன் வாகன சாரதி சிறுகயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

சாரதியின் நித்திரை கலக்கம் காரணத்தினாலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த எம்.கே.ஐ.பரந்தா (வயது 26) என்பவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவந்துள்ளனர்.

 

SHARE