நித்யானந்தரின் இன்னொரு முகம்! காவி உடை பெண் சாமியாருடன் சல்லாசம்!

621

 

நித்யானந்தரின் இன்னொரு முகம்! காவி உடை பெண் சாமியாருடன் சல்லாசம்! புதிய படங்கள்! (விரும்பினால் படிக்கவும்) “”அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வெள்ளை மாளிகைக்குள்கூட ஒருவர் உள்ளே போய்விட்டு திரும்பி விடலாம். ஆனால், பெங்களூரு அருகே பிடதியில்செயல்பட்டு வந்த நித்யானந்தர் ஆசிரமத்தில் அவரது படுக்கையறையில் நுழைவதுஎன்பது மாயாஜாலக் கதைகளில் சொல்லப் படுவதைப்போல 7 மலை தாண்டி, 7 கடல்தாண்டி, 7 பாதாள லோகம் தாண்டி உள்ளே இருக்கும் குகைக்குள் நுழைவதற்குசமம். லேட்டஸ்ட் உதாரணம் என்றால், செல்வராகவனின் “ஆயிரத்தில் ஒருவன்’படத்தில் சோழ மன்னரும் அவருடைய ஆட்களும் தங்கியிருக்கும் தீவுக்குள்நுழைவது போல படாதபாடு படவேண்டி யிருக்கும்” என்று நம்மிடம் சொல்லத்தொடங்கிய நித்யானந்தரின் சீடரான நித்ய தர்மானந்தா என்கிற லெனின், இத்தனை கட்டுப்பாடுகளையும் தாண்டி, ஆசிரமத்துக்குள் ரகசிய கேமரா பதிவு நடந்ததுஎப்படி என்பதை நம்மிடம் விவரிக்கத் தொடங்கினார்.

 

nithyanada9

“”ஒரு ஏக்கர் சுற்றளவுக்கு பரந்து விரிந்திருக்கும் நித்யானந்தரின்இருப்பிடப் பகுதிக்குள் புது ஆட்கள் யாரும் அனுமதியின்றிபுகுந்துவிடமுடியாது. தனது இருப்பிடத்தில் நித்யானந்தர் தங்கியிருக்கும்ரூமுக்குப் பக்கத்தில் ஒரு டைனிங் ஹால் உண்டு. அப்புறம் டிரெட்மில்பயிற்சி இடம், அப்புறம் ஒரு பெட்ரூம். அதையொட்டி ஒரு பாத்ரூம் என 1200சதுர அடியில் அவர் தங்குவதற்காக கச்சிதமாகக் கட்டப் பட்டுள்ளது.நித்யானந்தர் தங்கியிருக்கும் இடத்திலிருந்து 300 அடி தூரத்தில்இருக்கிறது அவருடைய பர்சனல் செகரட்டரி கோபிகாவின் அறை. அந்த அறையில்தான்நித்யானந்தரின் பக்தையான நடிகை ரஞ்சிதாவும் தங்கியிருந்தார். கோபிகாவுக்குத் தெரியாமல் எந்த ஒரு பொருளும் நித்யானந்தரின்இருப்பிடத்திற்குள் நுழைந்து விடமுடியாது. அப்படிப்பட்ட நிலைமையில்தான்,கோபிகாவின் அனுமதி யோடு உள்ளே கொண்டு செல்லப்பட்ட ஒரு பொருளுக்குள் அந்தகேமரா இருந்தது. அது ஆபரேட் ஆன டிசம்பர் 23-ல் தொடங்கி டிசம்பர் 25வரையிலான அந்த 48 மணிநேரம் ஆசிரமத்தில் மிக முக்கியமான திருவிழாநடைபெற்றுக் கொண்டி ருந்த நேரம்.  நித்யானந்தரின் உண்மையான பிறந்ததேதி 1.3.78. இதுதான் அவரது பாஸ்போர்ட்டில்உள்ளது. ஆனால், அவர் தன்னுடைய பிறந்ததேதி 1.1.1978 என்றும், புத்தாயிரம்பிறந்த 1.1.2000 அன்று தனக்கு ஞானம் பிறந்ததாகவும்சொல்லிக்கொண்டிருக்கிறார். அதனால் ஒவ்வொரு புத்தாண்டிலும் அவருக்குப்பிறந்தநாள் கொண்டாடப்படும். இந்த டூப்ளிகேட் பிறந்தநாளுக்காக 1 வாரகாலத்திற்கு ஆசிரமத்தில் திருவிழா நடக்கும். மேளதாள இசை அமர்க் களப்படும்.பூக்களின் அலங்காரம் கண்ணைப் பறிக்கும். பக்தர்கள் குவிந்துகொண்டேஇருப்பார்கள். நாட்டுக்கு தேசியக் கொடி இருப்பதுபோல, ஆசிரமத்திற்கென்றுதனியாக கொடி உண்டு. அதுபோல ஆசிரமத்திற்கென்று தனியாக இசையும் உண்டு. போனடிசம்பர் 22-ந் தேதியன்று ஆசிரமத்தில் கொடி யேற்றப்பட்டது. அதுதான் விழாதொடக்கத்திற்கான அடையாளம். 23-ந் தேதியிலிருந்து 31-ந் தேதி வரை தினமும்10ஆயிரம் பக்தர்களுக்குக் குறையாமல் ஆசிரமத்திற்கு வருவார்கள். 1-ந்தேதியன்று 1 லட்சம் பேர் திரள்வார்கள். அதற்கான ஏற்பாடுகள் அமோகமாக நடந்துகொண்டிருந்தது. டிசம்பர் 23-ந் தேதியன்று, உள்ளுணர்வை விழிப்படையச் செய்யும் inner awakening என்ற புரோகிராம் நடந்துகொண்டிருந்தது. இந்த புரோகிராமில் கலந்துகொள்வதற்கு 3 லட்ச ரூபாய் ஃபீஸ். அவ்வளவு பணம் கட்டித்தான் அத்தனை பக்தர்கள் வந்திருந்தார்கள். நித்யானந்தர் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். அவரது பேச்சாற்றல் மெஸ்மரிசம் செய்வதுபோல இருக்கும்.அவர், கண்களை மூடச்சொன்னால் மொத்த பேரும் கண்களை மூடிக்கொள் வார்கள். அவர்எப்போது திறக்கச் சொல்வாரோ அப்போதுதான் திறப்பார் கள். அன்றைக்கும்அப்படித்தான் கண்களை மூடி தியானத்தில் மூழ்கச் சொன்னார் நித்யானந்தர்.ஆயிரக்கணக்கான பக்தர்களும் அதை ஃபாலோ செய்து, கண்களை மூடியிருந்தநேரத்தில், நித்யானந்தர் அந்த மேடையிலிருந்து எழுந் தார்.  அங்கிருந்து அவ ரது இருப்பிடம் அமைந்துள்ள இடம், 1 கி.மீ. தூரத்தில்இருக்கும். காரில் ஏறி அவசரமாக தன் இருப்பிடம் சென்ற வர் தன் அறைக்குள்நுழைந்தார். அங்குதான் ரகசிய கேமரா வைக் கப்பட்டிருந்தது. அசைவுகள்தெரிந்தால், ஆட்டோமேட்டிக்காக படப்பதிவு செய்யத் தொடங்கிவிடும். அந்தகேமரா இயங்கத் தொடங்கியிருந்த நேரத்தில், நாங்கள் இன்னர் அவேக்கனிங்நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் பதட்டத் துடன் இருந்தோம். கேமராவை செட்டப்செய்தவர்கள் என்பதால்தான் அந்த பதட்டம். நித்யானந்தரின் செய்கைகள் எப்படிபதிவாகப் போகிறது, அதை எப்படி வெளியே எடுப்பது, மாட்டிக் கொள்ளக் கூடியசூழ்நிலை வந்தால் எப்படித் தப்பிப்பது என்றெல்லாம் யோசித்து அதற் கேற்பவாகனங் களையும் ரெடி பண்ணிவைத்து விட்டு, படபடப் போடு இருந்தோம். அந்தபதட்டமான நேரத்திலும் எனக்கொரு யோசனை. நித்யானந்தர் தன்னுடைய அறைக்குவந்துவிட்டாலும் அவருடைய பேச்சு, விஷுவலாக திரையில் ஒளிபரப் பாகிக்கொண்டிருந்தது. ஆசிரமத்திற்கு வந்து கொண்டிருக்கும் பக்தர்கள் அதைப்பார்க்காமல் இருக்க முடியாது. அந்த விஷுவலுக்குப் பதிலாக, ரகசிய கேமராவிலிருந்து டைரக்ட் லைவ்வாக ஒளிபரப் பினால் அத்தனை பேரும் பார்க்கமுடியும் என்பதால், அது பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால், அதற்கானடி.வி. டீம் எங்கள் தரப்பில் ரெடியாக இல்லை. அத்துடன், லைவ்வாக ஒளிபரப்புவதற்கான உபகரணங்களும் இல்லை. அதேநாளில், இன்னொரு பெண்ணுக்கு அவர் கொடுத்தடார்ச்சர் ரொம்ப கொடுமையானது. அதை உங்ககிட்டே சொல்லும் நேரம் வரும். முதல் நாள் பதிவு களை எடுத்துப் பார்க்க ஆசை. ஆனால் முடிய வில்லை. கண்காணிப்புகள் பலமாக இருந்தன. 10 மணி நேரம் ஓடிவிட்டது. 15 மணி நேரம்ஓடிவிட்டது. ஒரு நாள் கழிந் தும், பதிவுகளை எடுக்க முடியவில்லை. கடைசிநாள் (டிச.25) எல்லாம் முடிந்து, கேமராவை எடுத்து அதில் என்னபதிவாகியிருக்கிறது என்பதைப் பார்த்தபோது, பயங்கர ஷாக். நடிகைரஞ்சிதாவுடன் நித்யானந்தா இருக்கும் காட்சிகளைப் பார்த்ததும் ஆச்சரியமும்அதிர்ச்சியுமடைந்தோம். இதை எப்படி வெளியே கொண்டுபோவது, ரகசிய வீடியோஎடுக்கத் துணை நின்றவர்களை எப்படி வெளியேற்றுவது என்பதையெல்லாம் திட்டமிட்டோம். ஏனென்றால், நித்யானந்தர் தரப்பிடம் மாட்டிக்கொண்டால் என்னநடக்கும் என்பது எங்களுக்குத் தெரிந்ததுதான். எங்கள் திட்டமிடல் சரியாகஇருந்ததால், அந்த வீடியோ கேசட்டை வெளியே கொண்டு வந்தோம்.  அந்த வீடியோவில் ரஞ்சிதாவோடு கோபிகாம்மாவைப் பார்த்ததும் எங்களுக்குபயங்கர ஷாக். இவரா இப்படி என்று ஷாக் ஆக வில்லை. அம்மாவும் வீடியோவில்மாட்டிக்கிட்டாரே என்ற ஷாக்தான். அவங்க நித்யானந்தரோடு நெருக்கமா இருக்கிறவிஷயம் எங்களுக்கு ஏற்கனவே தெரியும். ஆசிரமத்தில் உள்ள எல்லோருமே பர்சனல்செகரட்டரி கோபிகாவை அம்மான் னோ, அக்கான்னோதான் கூப்பிடு வோம்.நித்யானந்தரேகூட சில நேரங்களில் அம்மான்னுதான் சொல்லுவார். கோபிகாம்மாஎங்க எல்லார்கிட்டேயும் ரொம்ப அன்பா அரவணைப்பா இருப்பாங்க. பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தரையும் அவரைப்போல ஒரு சிலரையும் தவிர, மற்ற எல்லாரும்நல்லவங்க தான். அவங்களில் கோபிகாம்மா ரொம்ப நல்லவங்க. அம்மா என்றசொல்லுக்குத் தகுந்தபடி மதர் குவாலிட்டி உள்ளவங்க. 2005-ம் வருஷம் ஜனவரியில், நித்யானந் தரின் டூப்ளிகேட் பிறந்தநாளை யொட்டி,நித்யானந்தம் என்ற நிகழ்ச்சி நடந்தது. அதில் டிவோட்டியாக கலந்துகொண்டபல்லாயிரக்கணக் கானவர்களில் ஒருவர்தான் கோபி காம்மா. கேரளாவைச் சேர்ந்தபெண்மணியான இவர், அமெரிக்காவில் தன் கணவருடன் சாஃபட்வேர் துறையில் வேலைபார்த்து வந்தார். லட்சக் கணக்கான ரூபாய் சம்பளம். அவங்க 2 பேருமே நித்யானந்தம் நிகழ்ச்சியில் 15 நாட்கள் கலந்துக்கிட்டாங்க. அப்ப அந்தநிகழ்ச்சியெல்லாம் இலவசமாகத்தான் நடந்தது. நானும் அந்த க்ளாசுக்குப் போயிருந்தேன். ரொம்ப அருமையா நித்யானந்தர் க்ளாஸ் எடுத்தார். அந்தக் க்ளாசில்எங்களைப் போலவே கோபிகாம்மாவும் அவங்க கணவரும் நித்யானந்தர் மேல் ரொம்பஅபிமானம் ஆயிட்டாங்க. அந்த க்ளாசில் கலந்துக்கிட்டவங்கதான் இப்பஆசிரமத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிற வங்க. நீங்க அப்ப க்ளாசுக்குவந்திருந்தாலும் நித்யானந்தரின் மெஸ்மரிசத்துக்கு கட்டுப் பட்டிருப்பீங்க.ஆசிரமத் திலேயே தங்கியிருப்பீங்க.

nithananda

அந்தளவுக்கு அவ ருடையே பேச்சும்செயல்பாடுகளும் இருக்கும்.  கோபிகாம்மாவுக்கும் அவங்க கணவருக்கும் மெடிட்டேஷன் சம்பந்த மான நல்லடெக்னிக்குகளை நித்யா னந்தா கற்றுக் கொடுத்தார். இரண்டு பேரும் தங்களைஆசிரமத்துக்கு அர்ப்பணிச்சிட்டாங்க. பிடதி ஆசி ரமத்தில் பர்சனல்செகரட்டரியாகி விட்டார் கோபிகாம்மா. அவரது கணவர், லாஸ் ஏஞ்செல்ஸில் உள்ளஆசிரமத்தில் இருக் கிறார். நித்யானந்தர் எங்கே டூர் போனாலும் அவர்கூட,கோபிகாம் மாவும் போவார். ரொம்ப நல்ல மனசு உள்ள அவங்க, இந்த ஃபிராடு கையில்சிக்கிக் கிட்டதுதான் பிரச் சினையே. இந்தம்மா மட்டுமில்லை. இவங் களைப்போலஇன்னும் பல பெண்கள் நித்யானந்தரின் பெட்ரூமில் சல்லாபத்துக்கு ஆளாகிசிக்கி சீரழிஞ்சிருக்காங்க. இதிலும் நித்யானந்தருக்கென்று தனி டெக்னிக் உண்டு. ஆசிரமத்தில் உள்ளஇளம்பெண்களைக் கூப்பிட்டு, தனக்கு கால் அமுக்கிவிடச் சொல்வார்நித்யானந்தர். அவர் நடத்தும் என்.எஸ்.பி. சக்தி தரிசனம் புரோகிராம்களில்பெண்கள் அவருக்கு கால் அமுக்கிக் கொண்டே இருப்பார்கள். அதற்கு அவர் ஒருவிளக்கம் கொடுப்பார். “இந்த பிரபஞ்சத்திற்கே நான்தான் கடவுள். இப்ப உடம்புக்குள்ளே அடங்கியிருக்கேன். அதனால் எனக்கு எல்லை தெரியலை. கை, கால்கள் எங்கே இருக்கிறதுஎன்பதே தெரியவில்லை. அதனால் எனக்கு உணர்வு வரலை. அது வருவதற்காகத்தான்அழுத்தச் சொல்றேன்’ என்பார். நாங்களும் இதை நம்பினோம். அவர்தான் கடவுள்என்று நம்புகின்ற பெண் பக்தர்கள், கை-கால் களை அமுக்கிவிடுவதற்கு இதுதான்காரணம். அவ்வப்போது சில ஆண் சந்நியாசிகளையும் கால் அமுக்கிவிடச் சொல்வார்இந்த பிரபஞ்சக் கடவுள். சில சமயங்களில் தன் உடலின் எல்லை எது என்றுதெரிந்துகொள்வதற்காக கைத்தடியையும் பயன்படுத்துவார்.  பாடியிலிருந்து எனர்ஜி அதிகமா ரேடியேட் ஆகும். அதை சரிசெய்வதற் காகத்தான்அழுத்தணும் என்பார். அதற்காக பெண் சந்நியாசிகளை தன்னோட அறைக்குவரச்சொல்வார். எந்தெந்த பெண்களை அனுமதிப்பது என் பதை கோபிகாம்மாதான்முடிவு செய்வார். கால் அமுக்க வரும் பெண்களை அப்படி யே மெஸ்மரிசம் செய்து,சீரழித்து விடுவார். அவருக்கு கால் அமுக்கிவிட்ட ஒரு பெண்கூட இதிலிருந்துதப்பியதில்லை. ஆனால், ஒரு பெண்ணுக்கு நடந்த விஷயம் இன்னொரு பெண்ணுக்குத்தெரியாது. இந்த ரகசியத்தை அவர் ரொம்பவும் ஜாக்கிரதையாகக் காப்பாற்றுவார். “என்னுடன் இணைந்தால், கிருஷ்ண னுடன் கோபியர்கள் கூடியதற்கு சமம். என்னுடைய எனர்ஜி உங்களுக்கு கிடைத்துவிடும்’ என்று சொல்வார். எந்தப் பெண்அவருடன் இருக்கிறாரோ, அந்தப் பெண் தனக்கு மட்டுமே எனர்ஜி கிடைத்ததாக நினைத்துக் கொள்வார். தன்னைப் போலவே பல பெண்களுக்கு சாமியார் எனர்ஜிகொடுத்திருக்கிறார் என்று தெரிந்துவிட்டால், பெண்களுக் கிடையே பொறாமை, கோபம், சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டுவிடும் என்பது நித்யானந்தரின் கணிப்பு. அவர்களுக்குள் ஏற்படும் சச்சரவுகள் தன்னை அம்பலப்படுத்திவிடும் என்கிறபயத்திலேயே அவர் ஒரு பெண்ணுடனான உறவை இன்னொரு பெண் ணிடம் வெளிப்படுத்தமாட்டார்.  கால் அமுக்கி விடும் பெண்களில் கோபிகாம்மாவும் உண்டு. அவங்க மேலே எங்களுக்கு மதிப்பிருப்பதால், அது பற்றி சொல்ல முடியலை. பெண் சந்நியாசிகளிடம், கடவுளுக்கு எல்லாம் செய்ய இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது என்று சொல்லித்தான் அனுப்புவார். அவங்களுக்கே ஒரு கட்டத்துக்குப் பிறகுதான், கால் அமுக்கச் சொல்வதன் ரகசியம் தெரிந்திருக்கிறது. ஆசிரமத்திலிருந்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ரகசியங்கள் இன்னும் எவ்வளவோ இருக்குது. ரஞ்சிதாவும் நித்யானந்தரும் இருக்கும் வீடியோவின்உண்மைத்தன்மை பற்றி போன முறையே அக்குவேறு ஆணிவேறாக சொல்லிவிட்டேன்.அதன்பிறகும் நித்யானந்தர் தரப்பிலிருந்து உண்மைகளை மறைத்துவிடலாம் என்றுநினைத்துக்கொண்டு அந்த வீடியோ பற்றி சந்தேகம் கிளப்புவது,பொதுமக்கள்கிட்டே காமெடியாகத்தான் இருக்குது.  ரஞ்சிதாவோடு நித்யானந்தர் இருந்த நேரத்தில், ஒரு கட்டத்தில் அவருக்கு அந்த கேமரா இருக்கும் பக்கம் ஏதோ ஒரு சந்தேகம் வந்து, தன் கையை நீட்டுவதை வீடியோவில் பார்க்கலாம். கையை நீட்டிக்கொண்டே ரஞ்சிதாவிடம் நித்யானந்தர் ஏதோ சொல்ல, ரஞ்சிதா நெளிகிறார். அவர்கள் இருவரின் முகமும் நன்றாகப்பதிவாகியுள்ளது. நித்யானந்தர் கைகாட்டிய திசையில் ரஞ்சிதா பார்த்த அந்தநொடி… நிறைய சொல்கிறேன்…… காத்திருங்கள்.” ஆன்மீகத்தையும் கடவுளையும் தேடிக்கொண்டிருப்பதாக இத்தனை காலமாகப்பிரசங்கம் செய்து வந்த சாமியார் நித்யானந்தா, இப் போது தலைமறைவாக இருந்தபடி, உண்மைகளைத் தேடிக் கொண்டிருப்பதாகவும், சட்டரீதியாக எந்தத் தவறும்செய்யவில்லை என்றும் வீடியோவில் பேசியிருக்கிறார். நக்கீரன் அம்பலப்படுத்திய நித்யானந்தா-ரஞ்சிதா வீடியோ காட்சிகளும், அந்த ரகசியவீடியோவை எடுத்த ஸ்ரீநித்ய தர்மானந்தா என்கிற லெனி னின் பேட்டியும்தான்நித்யா னந்தாவை பேச வைத்திருக் கிறது. இந்நிலையில், நக்கீரன் வாசகர்களிடம் தொடர்ந்து பேசி வரும் லெனின் ஆசிரமரகசியங்களை விரிவாக விளக்கி னார். “”சென்னையில் கறையான் மருந்து அடிக்கும்நிறு வனத்தைத் தொடங்கினேன். என் சொந்த சம்பாத்தியத்தில் தனி ஃப்ளாட்வாங்கினேன். எம்.எல்.எம் எனப்படும் சங்கிலித் தொடர் பிசினஸ் மூலம் வீ-கேன்காந்தப்படுக்கை பிரபலமானது. 20 லட்சம் பேர் அதில் பணம் கட்டினர்.தங்களுக்குத் தெரிந்தவர்களைச் சேர்த்து விட்டனர். நானும் அதில்உறுப்பினராகி பணம் கட்டினேன். வீ-கேன் நிறுவனத்திடம் ஏமாந்த பல இலட்சம்பேரில் நானும் ஒருவன். என் மேல் இது சம்பந்தமாக புகாரோ, வழக்கோ கிடை யாது. ஆன்மீகத்தில் மனம் நாட்டமாக இருந்ததால், நித்யானந்தாவின் பிரசங்கங்கள்நடக்கும் இடத்திற்கு நேரில் போய் அவர் பேச்சைக் கேட்பேன். இந்துமதத்திற்கு நானும் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் அவரது பேச்சைக்கேட்கும்போது ஏற்பட்டது. அவர் நடத்தும் மெடிட்டேஷன் கிளாசுக்குப் போவேன். இந்த இடத்தில் ஒரு விஷயத்தை சொல்லவேண்டும். நித்யானந்தர் சொல்லிக் கொடுத்த பயிற்சிகள் ரொம்பவும் எளிமை யானவை. அந்தப் பயிற்சிகளுக்கு நல்ல பலன் இருப்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். அவரால் ரொம்பவேஈர்க்கப்பட்டதால், பிசினசை ஓரங்கட்டி வைத்துவிட்டு, சொந்தக் காருடன்நித்யானந்தர் ஆசிரமத்திற்குப் போய்ச் சேர்ந் தேன். அவருடைய முக்கிய சீடராக ஆகினேன். சொன்னால் நம்பமாட்டீங்க. குஜராத்முதல்வர் நரேந்திர மோடி ஒரு முறை ஆசிரமத்துக்கு வந்தப்ப, நித்யானந்தர்காலில் விழுந்ததோடு என் காலிலும் விழுந் தார். அந்தளவுக்கு என்னை ஆசிரமத்தில் முக்கிய இடத்தில் நித்யா னந்தர் வைத்திருந்தார். ஆசிரமத்தில்ஆன்மீகப் பணிகளை நிறைவேற்று வதற்காக நிறைய பிரிவுகள் உண்டு. அதில்,சி.டி-புத்தகங்கள் ஆகிய வற்றைத் தயாரித்து வெளியிட்டு, வெளிநாடுகள் வரைஅனுப்பும் முக்கிய பொறுப்பைக் கொடுத்தார். தமிழகத்திற்கு நித்யா னந்தர் வரும்போதெல்லாம் அவருக்கு நான்தான் கார் ஓட்டுவேன். அவரைக் கடவுளா நினைச்சிருந்த எனக்கு இது பெரும் பாக்கியமாகஇருந்தது. நித்யானந்தரை சந்திக்க தமிழகத்து வி.ஐ.பி.கள், வி.வி.ஐ.பி.கள், சினிமா நடிகர்கள்-நடிகைகள் யார் வந்தாலும் நான் பக்கத்தில் இருப்பேன். என்மீது அவருக்கு ரொம்ப அன்பு உண்டு. அந்த அன்பு, ஆசிரமத்தில் இருந்த ஒருசிலருக்கு எரிச்சலையும் பொறாமையையும் உண் டாக்கியிருந்தது. எந்தநிர்வாகமாக இருந்தாலும் அதில் பாலிடிக்ஸ் இருக்கும். ஆசிரமத்திலும்பாலிடிக்ஸ்தான். அங்கே இருந்த 2 பேர் என்னை அவமரியாதை செய்தாங்க. அவங்கசெயல்பாடு பிடிக் காம ஒரு கட்டத்தில், ஆசி ரமத்தைவிட்டு வெளியேபோயிடுறதுன்னு முடிவு பண்ணிட்டேன். இந்த விஷயம் நித்யானந்தருக்குத் தெரிந்துவிட்டது. “தர்மா… நான் இருக்கிறேன். நீ ஓன்றும் கவலைப்படாதே’ என்று சொல்லி என்னைசமாதானப் படுத்தினார். ஆசிரமத்திலிருந்து வெளியேற நினைத்த என்னை அங் கேயேதங்க வைத்தார். கடவுளோட விளையாட்டைப் பார்த்தீங்களா? அன்னைக்கே என்னை அவர்போகச் சொல்லியிருந்தால் இந்தளவுக்கு அவர்கையும் களவுமா மாட்டியிருக்கமாட்டார். கடவுளே என்னை அனுப்பி வச்சி, இதையெல்லாம் முடிச்சிட்டுஆசிரமத்திலிருந்து வெளியே வாடா தர்மான்னு சொன்ன மாதிரி நினைக்கிறேன். நான்நித்யானந்தா வைத்தானே கடவுளா நினைச்சிருந்தேன். அவரை அம்பலப்படுத்துற வேலையை கடவுள் எனக்கு ஏன் கொடுக்கணும்? நித்யானந்தாவின் பயிற்சிகள் பலனளிப்பதாகவும் பவர்ஃபுல்லாகவும் இருந்தது.ஆனா, அந்த பவர் அவருக்கு 3, 4 வருஷமாகவே குறைந்துவிட்டது. அதை நான் மெல்லமெல்ல புரிஞ் சுக்கிட்டேன். அதை எல்லோருக்கும் ரஞ்சிதா வீடியோ மூலமாநித்யா னந்தரே புரிய வச்சிட்டார். அவருக்குப் பவர் இருந்திருந்தா,உண்மையான சக்தி உடையவரா இருந்திருந்தா, அவரோட பெட்ரூமில் அவரையே பார்த்துக்கிட்டிருந்ததே அந்த கேமரா, அதை உடனடியா கண்டுபிடிச்சி,அப்புறப்படுத்தியிருப்பாரே! அந்த பவர் அவர்கிட்டே இல்லாமப் போயிடிச்சி. நாங்க அவர் ரூமில் வைத்தது லேட்டஸ்ட் டெக்னிக் கேமரா. அதில் வாய்ஸ்ரெகார்டிங் இல்லாதபடி செட்டப் செய்தோம். ஏன்னா, வாய்ஸ் ரெகார்டிங் ஆனில்இருந்தால், செல்போன் அழைப்புகள் வரும்போது, கேமராவிலிருந்து டுர்ர்ர்..னு ஒரு சத்தம் வரும். அதை வச்சு நித்யானந்தர் கண்டுபிடிச்சிடுவாருங்கிறதால வாய்ஸ் ரெகார்டிங் இல்லாம எடுத்தோம். அந்தக் கேமராவோட விசேஷம் என்னன்னா, அறையில் ஏதாவது அசைவுகள் இருந் தால் வீடியோ எடுக்கும். அசைவுகள் இல்லாட்டாஆஃப் ஆயிடும். வெளி நாட்டிலிருந்து ஸ்பெஷலா வரவழைச்ச கேமரா. அந்த வீடியோ காட்சிகளை முழுசா பார்த் தவங்களுக்கு ஒரு விஷயம் தெரியும்.சோம்பேறியான நித்யானந்தர் சும்மா படுத்தே கிடக்கும்போது, கேமரா அப்படியேஸ்டில் போல இருக்கும். ரஞ்சிதாவை நித்யானந்தர் கட்டிப் பிடிக் கும்போதும்,கால்களைத் தூக்கிப்போடும்போதும் கேமரா படம் பிடிக்கும். இத்தனைடெக்னிக்குகள் உள்ள கேமராவை அவர் அறைக்குள்ளேயே வச்சி ருந்தும், அவரால்அதை ஏன் முழுசா உணர முடியலை? அவரிடமிருந்த சக்தி என்னவானது? தன்னுடைய போதனை களுக்கு எதிராக தானே நடந்துகொண்டால் சக்தி எப்படிஇருக்கும்? நித்யா னந்தர் எங்களுக்குப் பயிற்சி வகுப்பு எடுக்கும் போது, பாலுறவு என்பது சந்நியாசி வாழ்க்கைக்கு எதிரானது, அது கூடாதது என்று பல மேற்கோள்களைக் காட்டிப் பேசுவார். ஒவ்வொருவரும் தங்கள் உணர்வுகளை அடக்கி ஆளவேண்டும் என்று சொல்வார். அவ ருடைய வார்த்தைகளை கடவுள்வாக்காக நினைக்கும் நாங்கள் அப்படியே நடந்து கொள்வோம். அதிலும், அவர் கிழித்தகோட்டை நான் தாண்டியதில்லை. ஆசிரமத்தில் பணி விடை செய்பவர்களில் ஆணும் பெண்ணும் பேசிக் கொண்டாலேகண்டிப்பார். நான் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தை சொல்றேன். ஆனா இதை நான் நேரடியா பார்க்கலை. ஆசிரமத்தில் இருந்த ஒரு ஆணும் பெண்ணும் ஒருத்தரையொருத்தர் விரும்புறாங் கன்னு தெரிஞ்சதும் அந்தப் பெண்ணை நித்யானந்தர் கூப்பிட்டு பல பேர் முன்னிலையில் ரொம்ப தரக்குறைவான வார்த்தை களால்திட்டியிருக்கிறார். அதே போல ஆசிரமத்தில் இருந்த இன்னொரு பெண், சந்நியாசத்தை விட்டுட்டு குடும்ப வாழ்க்கைக்குத் திரும்பி, கல்யாணம்பண்ணிக்கிட்டு வாழலாம்னு நினைச்சது. அந்த பெண் ணுக்கும் ஆசிரமத்தில் இருந்த பையனுக்கும் நட்பு இருந்தது. அவங்க கல்யாணம் பண்ணிக்க முடிவுபண்ணி, ஆசிரமத்தை விட்டு வெளியேறி, கல்யாணம் பண்ணிக்கிட்டு, அதற்கப் புறமாஆசிர்வாதம் வாங் குறதுக்காக நித்யானந்தர் கிட்டே வந்தாங்க. அவர்மறுத்துட்டாரு. அவர்கூட இருந்த மற்ற சந்நியாசி களெல்லாம் அந்தப் பெண் ணைரொம்ப கேவலமா திட்டுனாங்க. “நீ நாசமா போயிடுவே.. உன்னையெல்லாம் யாரு கல்யாணம் பண்ணிக்கச் சொன்னா? நீசேர்ந்து வாழ மாட்டே… வாழாவெட்டி யாயிடுவே’ என்று சாபம் விட்டனர். காவிகட்டி யவர்கள் சாபம் விட்டால் அது பலிக்கும் என்பது விஸ்வாமித்திரர்காலத்தி லிருந்து சொல்லப்படுது. அப்படி இருக்கும்போது, இவர்களின் சாபம்அந்தப் பெண்ணையும் பையனை யும் என்ன பாடுபடுத்தப் போகுதோன்னு பயந்தேன்.இருந்தாலும், சந்நியாச வாழ்க்கையில் இருப்பவர்கள் ரொம்ப கட்டுப்பாடாஇருந்தால்தான் ஆண்டவனை அடைய முடியும்ங்கிறதாலதான் நித்யானந்தர் இத்தனை கெடுபிடியா நடந்துக்கிறார்னு நம்பி னேன். நித்யானந்தர் தன்னோட ஆசி ரமத்தில் உள்ள பெண்களை ஆரத்தழுவி தடவுவார்.தன்னுடைய முகத்தை அவர்களின் முகத்தோடு வைத்து, மென்மையாகத் தேய்ப்பார்.வருடுவார். இதனால் , அவருடைய பவர் தங்களுக்கு இடம்மாறுவதாக பெண்கள் நினைப்பார்கள். அந்தத் தழுவுதலின்போது, எந்தப் பெண்ணின் உடலாவது சிலிர்த்துவிட்டால், “நீ இன்னும் உணர்வுகளைக் கட்டுப்படுத்தவில்லை. நீ சந்நியாசவாழ்க்கைக்கு பொருந்தவில்லை’ என்று கோபமாகச் சொல்வார். இதெல்லாம் உண்மையென்றே நம்பினோம். ஆசிரமத்தில் இருப்பவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்ற எல்லோரும் ரொம்பகட்டுப்பாடானவங்க. அர்ப்பணிப்போடு நடந்துக்கிறவங்க. சந்நியாச வாழ்க்கைக்குவிரோதமா இருக்கமாட்டாங்க. 2009-ம் வருசம் கல்பதரு புத்தகத்தை வெளியிடும் பொறுப்பை சென்னையில் தங்கியிருந்து செய்தேன். ராயப்பேட்டையில் தான்பிரிண்டிங். வேலை நடந்துக்கிட்டி ருந்ததால், நவம்பர் மாதம் 13-ந் தேதிமாலையில், பெசன்ட் நகர் பீச்சில் என் காரில் உட்கார்ந்திருந்தேன். நான்இப்ப சொல்லப்போறது உங்களில் பலராலும் நம்ப முடியாத விஷயம். ஆன்மீகஉலகத்தில் இருப்பவர்களுக்குத்தான் அது தெரியும். நான் முழு சந்நியாசியாக வாழ்ந்தவன். பொதுவாக மனிதர்களுக்கு விடியற்காலை 4மணியிலிருந்து 6 மணிக்குள்தான் கனவுகள் அதிகமாக வரும். சந்நியாசவாழ்க்கையில் இப்படிப்பட்ட கனவுகளை அனுமதிப்பதில்லை. அத னால்தான் 4மணிக்கெல்லாம் எழுந்து தியானம் செய்துவிட்டு, பச்சைத்தண்ணீரில்குளித்துவிடுவோம். உடல்ரீதியாக எந்த தவறும் நடந்துவிடக்கூடாதுஎன்பதற்காகத்தான் இதைச் செய்வோம். பிரம்மச்சர் யத்தைக் காப்பாற்றுவதில்அத்தனை அக்கறையுடன் இருக்கவேண்டும். அன் றைக்கு மாலை 7 மணிக்கு காவிஉடையில், காரில் உட்கார்ந்தபடி மெடிடேஷன் செய்துகிட்டிருந்தேன். அப்போதுஎன் நினைவில் அந்த காட்சி வந்தது. நித்யானந்தர் பல பெண்களோடு இருப்பது போன்ற காட்சி அது. நான்அதிர்ச்சியாகிவிட்டேன். நடக்கின்ற ஒன்றுதான் , தியான நிலையில் எங்கள்மனக்கண்ணுக்குத் தெரியும். அந்தக் காட்சியில் எனக்கு முகம் தெரிந்த ஒருபெண்ணும் இருந்தார். அந்தப் பெண்ணைத் தொடர்புகொண்டு, இந்த நினைவு பற்றிசொல்லி, “உனக்கும் நித்யானந்தருக்கும் தொடர்பிருக்கிறதா? ஆம்- இல்லை இந்தஇரண்டில் ஒரு பதில் சொல்லு’ன்னு சொன்னேன். அந்தப் பெண், சிறிது நேரம்மௌனமாக இருந்துவிட்டு பிறகு “ஆமாம்’னு சொன்னாள். ஆசிரமத்தில் முழு அர்ப்பணிப்போடு இருந்த நான் அந்த நொடியிலேயே நொறுங்கிப் போனேன். மேலும் மேலும் விசாரித்த போது அதிர்ந்துபோனேன். படிப்பு, தொழில், சொத்து எல்லாவற்றையும் விட்டுட்டு, முழு வாழ்க்கை யையும்இந்த ஆசிரமத் திற்கே அர்ப்பணித்து விட்ட வன். என்னைப்போல பல் லாயிரம் பேர்நித்யானந் தருக்காக எதையும் விட்டு விட்டு வருகிறார்கள். பல லட்சம் பேர்தங்கள் சொத்துகளை இங்கே கொண்டு வந்து கொட்டு கிறார்கள். ஆனால் இங்கேஆன்மீகம் என்ற பெயரில் அக்கிரமங்கள் நடப்பதைப் பார்த் துக் கொண்டுசகித்துக் கொண் டிருக்க முடிய வில்லை. பணக்கார வீட்டைச் சேர்ந்த குடும்பப் பெண்கள், திரு மணமாகாத அழ கான பெண்கள்இவர்களையெல் லாம் தந்த்ராஸ் என்கிற தனக்குத் தெரிந்த கலையின் மூலம் மயக்கிவிடுவார் நித்யா னந்தர். இப்படி அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் நூற்றுக் கணக்கில் இருக்கி றார் கள்.இதை இப்படியே விட்டால் ஆயிரக்கணக்கான பெண்களின் வாழ்க்கையில் பாதிப்புஏற்படும். செக்ஸ் பற்றி நித்யானந்தர் பேசு வது ஒன்று, நடப்பதோ வேறொன்று.உலகம் முழுவதும் செல்வாக்குடன் உள்ள இவரால் ஏற்படும் சீரழிவு,ஆன்மீகத்திற்கும் இந்துமதத்திற்கும் மிகப் பெரிய பாதிப்பை ஏற் படுத்தும்என்பதால்தான் இதை அம்பலப்படுத்த முடிவெடுத்தேன். 2009-ம் வருடம் நவம்பர் 13-ந் தேதி, தியான நிலையில் எனக்குத் தெரிந்ததை,உலகத்திற்கு படம்பிடித்துக் காட்ட வேண்டும் என்பதற்காக 1 மாதம் ப்ளான்போட்டு செயல்பட்டேன். எப்படி வீடியோ எடுக்கப்பட்டது என்பதை தெரிந்துகொள்ளநீங்கள் ஆர்வமாக இருப் பீர்கள். அது 48 மணி நேர புராஜக்ட். அந்த 48 மணிநேரமும் என்ன நடந் தது என்பதை உங்களுக்கு அப்புறம் சொல்கிறேன். இப்போது முக்கிய மான ஒரு விஷயத்தை சொல்லவேண்டும். நக்கீர னில் போன முறைநான் என்ன சொல்லியிருந் தேனோ அதை அப்படியே கமிஷனரிடம் புகாராகக்கொடுத்திருக்கிறேன். இந்தப் புகாருக்குப் பதிலளிக்க வேண்டிய நித்யானந்தரின் ஆட்கள் என் மேல்அபாண்ட பழிகளை சுமத்தி, விவ காரத்தைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள்.நித்யா னந்தரும் ஒரு வீடியோ மூலமாக விளக்கமளித்திருக் கிறார்.அந்த வீடியோவில் அவர் முகம் களையிழந்து வழக்க மான சிரிப்பை தொலைத்து விட்டதை டி.வி.யில் பார்க்க முடிந்தது. நடந்ததற்கு விளக்கம் தராமல், “சட்டரீதியாக எந்தத் தவறையும் நானோ தியானபீடமோ செய்ய வில்லை’ என்கிறார். “இந்தக் குற்றச் சாட்டுகளுக்கும்வதந்திகளுக்கும் பின்னால் இருக்கும் காரணம், அவர்களின் மனஅமைப்பு,இவைகளில் இருக்கும் பொய்கள் அனைத்தையும் கண்டறிய எல்லா உண்மைகளையும்திரட்டிக் கொண்டிருக்கிறோம்’ என்கிறார். “இது போலியான வீடியோ என்றும்,எப்போது வீடியோ எடுக்கப்பட்டது என்ற நேரம்-தேதி இல்லை என்றும்’ அவர்தரப்பி லிருந்து செய்திகள் வெளியிடப் படுகிறது.இந்த வீடியோ கடந்த டிசம்பர் 23, 24, 25 தேதிகளில் எடுக்கப்பட்டது. அந்ததேதியையும் நேரத்தையும் வெளியிட்டால், அந்த சமயத்தில் யார் உடனிருந்தார்கள் என்பதைக் கண்டு பிடித்து அவர்களை ஆசிரம நிர்வாகம் என்னசெய்யுமோ என்ற தயக்கத்தில்தான் அதை எடுத்து விட்டு வெளியிட்டோம். இப்போது, வாசகர்களுக்காக அந்த தேதியும் நேரமும் உள்ள வீடியோ காட்சியைத்தந்திருக்கிறோம். வீடியோவில் உள்ள நேரமும், நித்யானந்தரின் அறையில் உள்ளகடிகாரத்தில் உள்ள நேரமும் ஒன்றாக இருப்பதை வாசகர்கள் புரிந்துகொள்ளமுடியும். இதிலிருந்தே இது போலி அல்ல என்பது நிரூபணமாகும். வீடியோ வெளியிடகாலதாமதம் ஆனதற்குக் காரணம் ஒரு சிலரின் பாதுகாப்புக் காகத்தான். இதுகுறித்தும் பிறகு விளக்கமாகச் சொல்கிறேன் ரஞ்சிதாவுடன் நித்யானந்தர் இருப்பது போலியானது என்கிறார்கள். அந்த வீடியோகாட்சி, ரஞ்சிதாவுடன் முடிந்து விடவில்லை. நித்யானந்தரின் செகரட்டரிகோபிகா வும் அவருக்குப் பணிவிடை செய்து, தொட்டுப் பார்க்கும் காட்சிகளும்இருக் கின்றன. அதையும் நீங்களே பாருங்கள். வீடியோவில் இருப் பதுநித்யானந்தர் இல்லை என்றால், அவரது பர்சனல் செகரட்டரி வேறு யாருக்குஇந்தளவு பணிவிடை செய் கிறார்? ஆசிரமத்தில் உள்ள செகரட்டரி கோபிகா இன்னொருவருடன் இப்படி இருக்க முடியுமா? இது போலியான வீடியோ அல்ல என் பதற்குஆதாரமாக நித்யானந்தருக்கு ரஞ்சிதா பொடுகு மருந்து தடவி பேன் பார்த்துவிடுவதை யும், காவி உடையை அகற்றிவிட்டு ஆயில் மசாஜ் செய்து விடுவதையும்பாருங் கள். தனது ஆசிரம வாசிகளிடம், தன் முதுகில் பெரிய மச்சம் உண்டு என்று நித்யானந்தர் அடிக்கடி சொல்வார். அந்த பெரிய மச்சமும் இந்த வீடியோ காட்சிகளில்இருப்பது தெரியும். போலீஸ் நித்யானந்தரை கைது செய்து காவி உடையைகழட்டினால் இந்தப் பெரிய மச்சம் அவர்களுக்கும் தெரியும். இந்தகாட்சிகளெல்லாம் எப்படி எடுக்கப்பட்டது, இன்னும் யார், யார்நித்யானந்தருடன் இருந்தார் கள் என்பதை இனி சொல்கிறேன்…” -என்று விளக்கமாக சொன்ன லெனின் என்கிற தர்மானந்தா, அந்த 48 மணி நேர சம்பவத்தை விளக்குவதற்குத் தயாராகிவிட்டார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தலைமையகம். 33நாடுகளில் கிளைகள். 32வயதில் இரண்டாயிரம் கோடி ரூபாய்களுக்கு அதிபதி. உலகம் முழுவதும் 1,500 கிளைகள். விவேக் ஓபராய் முதல் கர்நாடகா முதல்வர் எடியூரப்பா வரை விசிறிகள் என காவி சாம்ராஜ்யத்தை நிலை நாட்டிய சுவாமி நித்யானந்த பரமஹம்சர், தன்னுடைய காவி உடைக்குள் ஒளித்து வைத்திருந்த காமம், நடிகை ரஞ்சிதா ரூபத்தில் அம்பலப்பட்டுப் போகும் என கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார். கதவைத் திற காற்று வரட்டும் என்றவர் கதவைச் சாத்து காதல் வரட்டும் என்று அம்பலமாகட்டும் என எதிர்பார்த்திருக்க மாட்டார். இப்போது சர்வதேச மீடியாக்களின் பக்கங்களில் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கும் நித்தியானந்தர், தான் நடத்திய ஆபாச வேட்டை சி.டி. அம்பலமாகாமல் இருக்க நடத்திய கடைசி கட்ட சேஸிங் ஒரு விறுவிறுப்பான ஆங்கிலப் படம் போன்றது. பெயர் வைத்த ரஜினியின் குரு! மன அழுத்தத்தைக் குறைக்கும் ஹீலிங் தெரபியில் எக்ஸ்பர்ட்டான நித்யானந்தரை முதன் முதலில் அடையாளம் கண்டுகொண்டது திருவண்ணாமலை விசிறி சாமியார்தான். எட்டு வயதில் இருந்தே ஆன்மிகத்தில் பற்று கொண்டிருந்த ராஜசேகருக்கு, இமயமலையில் வைத்து பரமஹம்ச நித்யானந்தர் எனப் பெயர் சூட்டியது நடிகர் ரஜினியின் ஆன்மிக குருவான பாபாஜி. மெக்கானிக்கல் டிப்ளமோ பட்டம் மட்டுமே வாங்கியிருந்த நித்யானந்தருக்கு சரளமாகப் பேசத் தெரிந்த ஆங்கிலமும், தீவிர புத்தக வாசிப்பும் தனித்த புகழைத் தேடித் தந்தது. இதுவரை யாரையும் குருவாக ஏற்றுக் கொள்ளாத நித்யானந்தர், தனக்கென ஒரு பெருங் கூட்டத்தை ஏற்படுத்திக் கொண்டார். பெங்களூரு தமிழ்ச் சங்கத்தை நடத்தி வந்த சண்முகசுந்தரம் நித்யானந்தரிடம் பக்தியைக் காட்ட மைசூரு நெடுஞ்சாலையில் உள்ள பிடாடியில் 200 ஏக்கர் ஆசிரமம் எழுந்தது. ஆனந்த நடன அசிங்கம்! இந்த ஆசிரமம் உருவாவதற்கும் ஒரு பின்னணியைச் சொல்கிறார்கள். பெங்களூரு ஆசிரமத்தில் அய்நூறு ஆண்டுகள் பழைமையான ஆலமரம் ஒன்று இருக்கிறது. அந்த ஆலமரத்தின்கீழ் 800 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சித்தர் சமாதியானாராம். அந்த சித்தர்தான் இந்த ஜென்மத்தில் அவதரித்துள்ள நான் என்றாராம் நித்யானந்தா. சாமியார் கைகாட்டிய அந்த இடத்திலேயே மிகப் பெரிய காம்பவுண்டு சுவர் எழுப்பப்பட்டு, நித்யானந்த தியான பீட ஆசிரமம் உருவானது. எட்டு ஆண்டுகளாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆசிரமத்தின் அசிங்கப் பக்கங்கள் அம்பலமானது 2005 ஆம் ஆண்டில் சிறு வயதுப் பெண்களை நித்யானந்தா அருகில் அவரது சீடர்கள் அனுமதிக்கிறார்கள். ஹீலிங் தெரபியைக் கொடுக்கும் போது இளம்பெண்களின் உடல்களை வருடுகிறார். இவர் நடத்தும் ஆனந்த நடனத்தில் நடக்கும் காட்சிகள் அருவருப்பானவை. ஸ்டார் ஓட்டல்களை விஞ்சும் வகையில் ஆனந்த நடனம் இருக்கிறது என்றெல்லாம் புகார் சொல்லப்பட்டது. பெங்களூரு டூ சேலம் … இன்றைக்கு சுவாமிகளின் படங்களுக்குச் செருப்படி கொடுக்கிறார்கள். போராட்டம் ஆர்ப்பாட்டம் எனத் தீவிரம் காட்டுகிறார்கள். முதலியார் இனத்தில் பிறந்தவரை வேற்று சாதி சன்னியாசிகள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். அதன் விளைவுதான் இந்தப் பிரச்சினையெல்லாம் என புதுக் காரணத்தை அடுக்கிய ஆசிரம நிருவாகி ஒருவரிடம் அப்படியானால் வெளியான படங்கள் அவருடையது அல்ல என்கிறீர்களா? என்றோம். இது பற்றி உண்மைகளைப் பேச ஆரம்பித்தால் எனக்கு நேரும் விளைவுகளை நினைக்கவே பயமாக இருக்கிறது. இந்த ஆபாச சி.டி. விவகாரத்தின் பின்னணி எட்டுப் பேருக்குத் தெரியும். ஆசிரமத்தில் சுவாமிக்கு அடுத்தடியாக இருக்கும் இவர்கள் மூலம்தான் பெரும் தொகையைக் குறி வைத்துப் பேரம் நடந்தது. இரண்டு மாதங்களாக நடந்து கொண்டிருந்த இந்த சேஸிங் காட்சிகள் பெங்களூரு ஆசிரமத்தில் தொடங்கி, சேலம் அழகாபுரத்தில் முடிந்தது என்று சொன்னால்தான் பொருத்தமானதாக இருக்கும். இந்தப் பேரத்தில் பங்கெடுத்த ஒருவரிடம் அனுப்புகிறேன். அவரிடம் பேசுங்கள். இன்னும் விளக்கமாகத் தகவல் கிடைக்கும் என நம்மை அங்கிருந்து சென்னை நகரின் பிரதான பகுதியில் உள்ள அந்த நபரின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். நாம் சந்தித்த ஆசிரமத்தின் அந்த முக்கிய நபர் கூறும் காட்சிகள் இனி அப்படியே. ரஞ்சிதா என்ட்ரி … இதுவரை மீடியாக்களில் ஒளிபரப்பான காட்சிகள் இருபது நிமிடம் அய்ந்து செகண்ட். ஆனால், உண்மையில் ஒரு மணிநேரம் 48 நிமிடங்கள் கொண்ட முழுநீளஆபாசப்படம் அது. நடிகை ரஞ்சிதாவோடு சுவாமி இருக்கும் அறை பெங்களூருவில் உள்ள அவரது படுக்கை அறைதான். அந்தப் படுக்கையறைக்குள் அவ்வளவு சுலபத்தில யாரும் நுழைய முடியாது. ராணுவத்தில் மேஜராக இருந்த ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார் ரஞ்சிதா. நாடோடித் தென்றல் உள்ளிட்ட சில படங்களில் நடித்து முன்னணி வரிசையில் வந்த நேரத்தில் திருமணமும் செய்து கொண்டார். காஷ்மீரில் சில காலம் சேர்ந்து வாழ்ந்த ரஞ்சிதாவுக்கு அந்த வாழ்க்கை பிடிக்காமல் விவாகரத்து வாங்கினார். மிகுந்த மனப் போராட்டத்தில் இருந்த அவரிடம் நடிகை ராகசுதா, சுவாமி நித்யானந்தாவிடம் ஹீலிங் தெரபி வாங்கினால், மனசாந்தி கிடைக்கும் என பெங்களூரு நெடுஞ்சாலைக்கு ரூட் போட்டுக் கொடுத்தார். இதன் பிறகு ஆசிரமத்திலேயே தங்கி சேவை செய்ய ஆரம்பித்தார் ரஞ்சிதா என தொடக்கத்தை விவரித்தவர், அளவுக்கு மிஞ்சிய செக்ஸ் . . . மரணத்தை மகிழ்வோடு ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை உருவாக்கவேண்டும். அடிமனதில் மன அமைதியை உருவாக்குவதன்மூலம் இறைவனை அடையலாம் என்ற சுவாமியின் அடிப்படை தியரி ரஞ்சிதாவுக்கும் பிடித்துப் போய்விட்டது. பெங்களூரு ஆசிரமம் ஒரு வினோதமானது. அங்கு ஆண், பெண் பாகுபாடெல்லாம் கிடையாது. ஓரிரு மணி நேர உறக்கம். மற்ற நேரமெல்லாம் தியானம்தான். எப்போதும் இளம் பெண் துறவிகளும், ஆண் துறவிகளும் நடந்து கொண்டேயிருப்பார்கள். இந்த வாழ்க்கையோடு ரொம்பவே பழக்கப்பட்டு விட்டார் ரஞ்சிதா. நித்யானந்தரின் படுக்கையறையைச் சுத்தம் செய்ய பல பெண்கள் வந்து போவார்கள். அவர்களைப் போல்தான் இவரும் ஒரு கட்டத்தில் சுவாமியோடு மிகவும் நெருக்கமாகிவிட்டார். இதை ஒரு சில துறவிகள் பார்த்துவிட்டாலும் யாரும் கண்டு கொள்ளவில்லை. அங்குள்ள வாழ்க்கை முறைகள் அப்படி. அளவுக்கு மிஞ்சிய செக்ஸ் தவறில்லை என்பது ஓஷோவின் தத்துவம்தான் என்றாலும், அதை வெளிப்படையாக யாரும் சொன்னதில்லை. அமெரிக்க கேமரா அஸ்திரம் . . . இந்த நேரத்தில் சுவாமிகளின் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளைப் பார்த்த ரஞ்சிதாவுக்கு சின்ன ஆசை ஏற்பட்டிருக்கிறது. சரியான நேரம் பார்த்துக் காத்துக் கிடந்தார். அவருக்குப் பின்புலமாக இருந்து தூண்டில் வீசியது ஆசிரமத்தின் ஒரு சில துறவிகள்தான். (அட). அவர் பயன்படுத்திய கேமிரா உளவுத் துறைக்குப் பயன்படுத்தும் அதிநவீன கேமரா. அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டது என்பது நாங்கள் பின்பு நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. அந்த கேமிராவின் தொழில் நுட்பம் எப்படியென்றால் ஏதாவது பொருள்கள் அசைந்தால் மட்டுமே படம் பிடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. சுவாமியோடு தான் இருக்கும் நாட்களில் உடலுறவுக் காட்சிகளைப் படம் பிடிக்கவேண்டும் என முயற்சி செய்து கொண்டிருந்தார். அவரது அறையைச் சுத்தம் செய்யப் போனவர் படுக்கையில் இடதுபுறத்தில் உள்ள பூச்சட்டியில் இந்த கேமராவை சரியான கோணத்தில் பொருத்தியிருக்கிறார். வழக்கம் போல் அன்றிரவு இருவரும் இணைந்திருக்கிறார்கள். நீங்கள் பார்த்த ஒரு காட்சியின் போது விளக்கை அணைக்க சுவாமி முயலும்போது ரஞ்சிதா அதைத் தடுக்கும் காட்சிகள் தெளிவாகத் தெரியும். இதிலிருந்தே ரஞ்சிதாவின் சூழ்ச்சியைத் தெரிந்து கொள்ளலாம். துணையோடு தூண்டில் இதன்பிறகு எதையும் காட்டிக் கொள்ளாமல் வழக்கம் போல் ஆசிரமத்தின் பணிகளில் தீவிரம் காட்டிய ரஞ்சிதா, சுவாமியின் அனுமதியோடுதான் டி.வி.சீரியல்களில் தலைகாட்டி வந்தார். இந்தக் காட்சிகளை வியாபாரமாக்கும் நோக்கத்தில் இருந்தவருக்கு தூபம் போட்ட சாமியார்களும் ஆசிரமத்தில் ஒரு சில பாலியல் விவகாரங்களில் பெயரைக் கெடுத்துக் கொண்டவர்கள்தான். இவர்களது சீண்டல்களால் இதுவரை அய்ந்து இளம் பெண்கள் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார்கள். ஒரு கனடா நாட்டு இளம் துறவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதெல்லாம் ஆசிரம வளாகத்திற்குள்ளேயே மூடி மறைக்கப்பட்ட உண்மைகள். இதில் நித்யானந்தா டார்ச்சரால் இரு பெண்கள் தற்கொலை வரை போனதாகவும் சொல்கிறார்கள் என்றனர். ரஞ்சிதாவை இயக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர் சுவாமி தர்மானந்தா. சேலத்தைச் சேர்ந்த இந்தத் துறவியின் இயற்பெயர் லெனின். 2004 ஆம் ஆண்டு காந்தப் படுக்கைமோசடியில் சேலம் அழகாபுரம் காவல்நிலையத்தில் புகார் தரப்பட்டது. இந்த விவகாரத்தில் பெயரைக் கெடுத்துக் கொண்டவர்தான் லெனின். பின்னர் பெயரை மாற்றிக் கொண்டு சுவாமியின் நம்பிக்கைக்குரிய ஒருவராக மாறினார். ஆசிரமத்தின் முதல் பத்து முக்கிய நபர்களில் இவரும் ஒருவர். ரஞ்சிதா விவகாரத்தில் இருந்து சாமியைக் காப்பாற்ற, தான் பாடுபடுவதாகக் கடைசி வரை காட்டிக் கொண்ட இந்தத் துறவிதான் எல்லாவற்றுக்கும் காரணம். இப்போது மீடியாக்களுக்கு இதை அனுப்பி வைத்ததும் இந்த லெனின்தான். ஆபாசத்தின் விலை அய்ம்பது கோடி ரூபாய இரண்டு மாதங்களுக்கு முன்பு பேச்சு வார்த்தை தொடங்கியது. அப்போது லெனின் தன்னிடம் மிக ரகசியமாக இதை ரஞ்சிதா கொடுத்ததாக சில படங்களை ஆசிரமத்தின் தலைமை நிர்வாகியிடம் கொடுத்தார். அதில் ரஞ்சிதாவும், சுவாமியும் இருக்கும் ஆபாசப் படங்கள் மட்டுமே இருந்தன. இதற்கு மசியாத ஆசிரம நிர்வாகிகளிடம் சி.டி.யும் காட்டப்பட்டது. இது வெளியாகாமல் இருக்க ரஞ்சிதா நிர்ணயித்த தொகை அய்ம்பது கோடி ரூபாய். இதில், சரிபாதி லெனின் மற்றும் அவரது அண்ணன் குமார் ஆகியோருக்கு என்று முடிவானது. நித்தியானந்தரின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமல் அவருக்கு அடுத்தபடியாக இருக்கும் சதானந்தா உள்ளிட்ட வெகுசிலருக்கு மட்டும் இந்த சி.டி.காட்டப்பட்டது. இந்தக் காட்சிகளைப் பார்த்த பெங்களூரு ஆசிரமத்தின் வி.அய்.பி. துறவி ஒருவர், இது பக்கா பிளாக்மெயில். இது சுவாமியே கிடையாது. அவளை உள்ளே அனுமதித்ததற்கு அய்ம்பது கோடி ரூபாய் என்பது டூ மச் என சத்தம் போட்டார். இவரது அவசர செயல்பாடுதான் முதலில் போடப்பட்ட அச்சாரம். இந்த சி.டி.விவகாரம் பல கட்டங்களாக சென்னை மற்றும் பெங்களூருவில் பேரம் நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தை நடக்கும் போது செல்போனில் மட்டுமே ரஞ்சிதா பேசுவார். தர்மானந்தாதான் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டார். நேரடிப் பேச்சில் நித்தியானந்தா பின்னர் விவகாரம் சீரியஸாகப் போன நேரத்தில் மட்டும் நான்கு முறை நேரடிப் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டார் நித்யானந்தா. பெங்களூரு ஆசிரமத்தில் பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்தாலும், சக துறவிக்கு இவ்வளவு பணம் செல்வதை நிர்வாகிகள் சிலர் விரும்பவில்லை. லெனினை சந்தேகத்துடன் பார்த்து வந்தனர். பணம் வருவதற்குத் தாமம் ஏற்பட்டதால் ரஞ்சிதாவுக்குச் சாதகமாக நேரடி வியாபாரத்திற்கு உதவி செய்ய முன்வந்தார் சென்னையைச் சேர்ந்த கிறிஸ்துவ தொழில் அதிபர் ஒருவர். சுவாமியின் பெயர் கண்டிப்பாக நாறிப்போகும். பணத்தைக் கொடுத்து செட்டில் பண்ணுங்கள் என அவர் சொல்ல, இரண்டு வாரத்திற்கு முன்பு சென்னையில் முக்கிய ஓட்டலில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், ஆசிரம நிர்வாகிகள், தர்மானந்தா, தொழிலதிபர் என குறிப்பிட்ட சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். ஃபைனல் ரேட் 15 கோடி ரூபாய் நீண்ட நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் அய்ம்பது கோடி என்பது அதிகம். கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என கோரிக்கை வைக்கப்பட கடைசியாக யாருக்கும் பாதகமில்லாமல் முடிவாக 15 கோடி கொடுக்கிறோம். அந்த சி.டி.யின் ஒரிஜினல் பிரிண்ட் படங்கள் என அனைத்தும் செட்டில் செய்யப்பட வேண்டும் என ஆசிரம நிர்வாகிகள் உறுதியாகத் தெரிவித்தனர். இந்தத் தகவல் நித்யானந்தருக்கு அப்போதே செல்போனில் சொல்லப்பட நான் கட்டிக் காத்த பெயர் காற்றில் பறந்துவிடக்கூடாது. 15 கோடி ரூபாயை செட்டில் பண்ணுங்கள். தர்மானந்தாதான் இவ்வளவும் செய்திருக்கிறான். அவனை ஒன்றும் செய்ய வேண்டாம் எனப் பேசியிருக்கிறார். இதன் பிறகும், இந்தப் பணம் லெனினுக்குப் போய்ச் சேரக்கூடாது என ஆசிரம நிர்வாகிகள் வஞ்சம் பார்த்ததன் விளைவுதான் இப்படி ஊரெல்லாம் சிரிப்பாய் சிரிக்கக் காரணம் என பேரத்தின் உச்சத்தை அதிர்ச்சியோடு விவரித்தவர், லெனினுக்குச் சொந்த ஊர் சேலம். இதே சேலம்தான் நித்தியானந்தருக்கு இறுதி சவக்குழி தோண்டக் காரணம். கடந்த 15 ஆம் தேதியில் கோவை சேலத்தில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தச் சென்றார் சுவாமி. கோவை வ.உ.சி. மய்தானத்தில் அவரைப் பார்க்கத் திரண்ட கூட்டமே அவரது மகிமையைச் சொல்லும். சேலம் அழகாபுரத்தில் உள்ள ஆசிரமத்துக்குச் சென்றவர், முக்கிய வி.அய்.பி.களின் வீடுகளுக்குச் சென்று பூஜையும் செய்தார். சேலம் நேரு அரங்கில் மாபெரும் சொற்பொழிவை நிகழ்த்திவிட்டு ராமகிருஷ்ணா தெருவில் உள்ள ஆசிரமத்தின் கிளைக்கு இரவு வந்தார். தர்மானந்தாவும் அங்கு இருந்தார். இந்தக் கிளையில் நள்ளிரவு இரண்டு மணி வரை நடந்த வாக்குவாதங்களை சாகும் வரையில் நித்யானந்தாவால் மறக்கமுடியாது. தர்மானந்தா உள்பட பேரம் பேச அழைக்கப்பட்டவர்கள், தொகை போதாது. இன்னும் கொஞ்சம் வேண்டும் என்றெல்லாம் பேச, ஒரு கட்டத்தில் கடுப்பின் உச்சிக்கே போன சுவாமி, ஆசிரமத்தில் தர்மானந்தா செய்த செயல்களைப் பற்றியும் ரஞ்சிதாவோடு சேர்ந்து கொண்டு என்னை பிளாக் மெயில் செய்வது சரியானதா? எனவேதனைப்பட்டார். அருகில் இருந்த ஆசிரம நிர்வாகிகள் சுவாமியின் நிலையைப் பார்த்து கண்ணீர் வடித்தனர். தர்மானந்தாவுக்கு அடைக்கலம் கொடுத்ததன் விளைவை, தான் அனுபவிப்பதாகப் புலம்பினார் சுவாமி. இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ரஞ்சிதா தரப்பினர் பணம் வந்தே தீரவேண்டும். இல்லாவிட்டால் ஊரெல்லாம் அம்பலமாகும். அதான் ஆசிரமத்தில் பல ஆயிரம் கோடிகள் இருக்கிறதே என அழுத்தமாகப் பேச ஒரு கட்டத்தில் தன் முகத்தில்தானே அறைந்து கொண்டு கதறி அழ ஆரம்பித்துவிட்டார் நித்யானந்தா. நீண்ட நேரம் நீடித்த அவரது அழுகையை யாராலும் நிறுத்த முடியவில்லை. பின்னர் ஒரு வழியாகத் தன்னைத் தேற்றிக் கொண்டவர், இத்தோடு செட்டில் செய்துவிடுங்கள். நான் இனி தர்மானந்தா முகத்திலேயே விழிக்கக் கூடாது என முடிவாகச் சொல்லிவிட்டார். அத்தோடு பிரச்சினை முடிந்தது. பணத்தை செட்டில் செய்வதற்குக் கால அவகாசம் கேட்கப்பட்டது. அந்த நேரத்தில் சுவாமியின் கதறலைப் பார்த்திருக்கிறார் வி.அய்.பி. பக்தர் ஒருவர். அவர் ஆசிரமத்தின் தலைமை நிர்வாகி ஒருவரிடம், தர்மானந்தாவின் கதையை நான் பார்த்துக் கொள்கிறேன். பணம் எதுவும் தரவேண்டாம். போலீஸ் அதிகாரிகள் நமக்குத் துணை நிற்பார்கள் எனச் சொல்லியிருக்கிறார். டி.ஜி.பி. இருக்கிறார் இந்தத் தகவலை சுவாமியிடம் கூறிய ஆசிரமத்தின் துறவி தமிழ்நாட்டில் டி.ஜி.பி. லத்திகா சரணிடம் பேசப் போகிறார்கள். அவனை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடலாம். போலீஸ் விட்டாலும் உங்களுக்காக உயிரை விடக் காத்திருக்கும் மூன்றரை லட்சம் பக்தர்கள் அவனை சும்மா விடமாட்டார்கள். என ஆறுதல்படுத்த நிம்மதிப் பெருமூச்சில் ஆழ்ந்தார் நித்யானந்தா. இந்த விவரம் தர்மானந்தாவுக்குத் தெரிந்தால் திருந்திவிடுவான். 15 கோடி ரூபாய் மிச்சம் எனஆசிரம நிர்வாகி ஒருவர் கணக்கு போட்டார். இதைத் தெரிந்து கொண்ட தர்மானந்தா, இரண்டு மாதம் பாடுபட்டும் பைசா தராமல் ஏமாற்றுகிறார்கள். போலீசில் போனால் சிக்கிவிடுவோம். போலீசிலிருந்து தப்பினால் இவர்கள் உயிரோடு விடமாட்டார்கள் எனப் பயந்து முதல் கட்டமாக செல்போனை சுவிட்ச் ஆப் செய்தார். இப்போது ரஞ்சிதா நாங்கள் எவ்வளவோ முயற்சித்தும் தர்மானந்தாவைப் பிடிக்க முடியவில்லை. சேலத்திலும் தேடினோம். இதன் பிறகு ரஞ்சிதாவோடு சுவாமி இருக்கும் ஒரு சில காட்சிகளை மட்டும் அனைத்து மீடியாக்களுக்கும் சென்று சேரச் செய்தார். இதை வைத்து ஒரு மீடியா, இரண்டு கோடி ரூபாய் கொடுங்கள். செய்தியை வெளியிட மாட்டோம் என மிரட்டிய தகவலும் உண்டு. இதே மீடியா நடிகை ரஞ்சிதாவை நித்யானந்தாவுக்கு எதிராகப் புகார் கொடுக்கத் தூண்டியபோது நான் தவறு செய்துவிட்டேன். என் விவகாரத்தை நான் கையாளாமல் மூன்றாம் நபரிடம் பொறுப்பை ஒப்படைத்ததுதான் பெருங்குற்றம். சுவாமிஜிக்கு எதிராக நான் எந்தப் புகாரும் சொல்லமாட்டேன் என உறுதியாக மறுத்துவிட்டார். இப்போது நித்யானந்தாவிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டுவிட்டு பெங்களூரு ஆசிரமத்தில் ஹாயாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் ரஞ்சிதா. மீடியாக்களின் பார்வை திசை மாறும்போது சீரியல் வேலைகளில் இறங்குவார். சுவாமி இப்போது வாரணாசியில் பூரண கும்பமேளாவில் இருக்கிறார். ஒரு வாரம் கழித்துதான் வருவார். அதற்குள் எல்லாம் மாறிவிடும். இதுதான் நடக்கப் போகிறது என்றவர், எது நடக்கக்கூடாது என சுவாமி நினைத்தாரோ அது நடந்து விட்டது. இதில் குற்றவாளி யார்?காமத்திற்கு சபலப்பட்டவரிடம் பணத்திற்கு சபலப்பட்டவர் விளையாட நினைத்தார். இரண்டு பேரின் பசியும் ஒன்றுமில்லாமல் மீடியாவின் பெரும் பசியைத் தீர்த்துவிட்டதுதான் இந்த இருவரும் செய்த அருஞ்செயல் என சேஸிங்கை படிப்படியாக விவரித்து முடித்தார். நமக்கு வியர்த்துக் கொட்டியது. மீடியாக்களில் நித்யானந்தரின் ஆலிங்கனங்கள் அம்பலமாகும் தகவல்கள் வாரணாசியில் இருக்கும் அவருக்குத் தெரிவிக்கப்பட, எல்லாம் எனது விதிப் பயன். உங்கள் எல்லோரையும் நான் மனதார நம்பினேன். என்னைக் கைவிட்டு விட்டீர்கள். இந்தச் செயலால் நான் காராஹிருகத்திற்குச் (சிறை) செல்ல வேண்டிய நிலை வந்தாலும் ஏற்றுக் கொள்வேன். கடவுளின் விருப்பம் எதுவோ அதுதான் நடக்கும் எனச் சொல்லிவிட்டு குலுங்கிக் குலுங்கி அழுதாராம். இப்போது அவத் தேற்றுவதற்குப் புதிய வார்த்தைகளைத் தேடி அகராதியைப் புரட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஆசிரம துறவிகள். Reporter shockan “”நக்கீரனால்தான்இந்த துணிச்சலான செயலை செய்யமுடியும். ஆன்மீகப் போர்வையைப் பொத்திக்கொண்டுசல்லாப ஆட்டம் போடுபவர்களை முகம் மறைக்காமல் வெளிப்படுத்த உங்களால்மட்டும்தான் முடியும்” -தமிழகம் முழுவது மிருந்து வாசகர்களும்பொதுமக்களும் தொடர்புகொண்டபடியே இருக்கிறார்கள்.பரமஹம்ஸ(!) நித்யானந்தருடன் நடிகை ரஞ்சிதா நெருங்கியிருக்கும் காட்சிகளுக்காகத்தான்மக்களிடமிருந்து இந்த பாராட்டு. உலகம் முழுவதும் பிரபல மான நித்யானந்தாவை சிக்க வைக்கும் வீடியோவை எடுத்த நபர் யார்?கடந்த 6 மாத காலமாக நம்முடன் தொடர்பில் இருந்தவர். தற்போது தலைமறைவான அவரது இருப்பிடம் அறிந்து நேரில் சென்று சந்தித்தோம். முன்புபார்த்தபோது காவி உடை, உத்திராட்சம், நெற்றிப் பொட்டு என நித்யானந்தாபோலவே ஸ்ரீநித்ய தர்மானந்தாவாக (ஆசிரமத்தில் நித்யானந்தர் வைத்தபெயர்)இருந்தவர், இப்போது ஜீன்ஸ் பேண்ட்- ஷர்ட்டில் “உன்னைப்போல்ஒருவன்’கமலஹாசன் போல லேப்-டாப் சகிதம் இருந்தார். அவருடைய பழைய சிரிப்புமட டும்மாறவில்லை. “”மிகப்பெரியசாதனையைச் செய் திருக்கீங்க” என்று கை கொடுத்தோம். அவர் அடக்கமாகப் புன்னகைத்தார். அந்த இளைஞரின் பெயர், லெனின். கம்யூனிஸ்ட்குடும்பத்தைச்சேர்ந்த தமிழ் இளைஞர். என்ன நடந்தது என்பதை விவரிக்கத்தொடங்கினார். அவர்உண்மைதான் பேசுகிறார் என்பதை தீர்க்கமான கண்கள்உணர்த்தின. (பாதுகாப்புகாரணங்களுக் காக அவரின் படம் வெளியிடப்பட வில்லை.) “”நான்கடவுள் நம்பிக்கையில்லாதவனாகத்தான் இருந்தேன். நித்யானந்தாவின்பிரசங்கங்களைக் கேட்க ஆரம் பித்ததும், அவர் மீது ஒரு ஈர்ப்புஏற்பட்டது.இத்தனை சின்ன வயதில், மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில்ஆன்மீகச் சேவைசெய்கிறாரே என்று ஆச்சரியப்பட்டேன். நாம் வாழ்ந்ததற்குஅடையாளமாக இந்தசமுதாயத்திற்கு ஏதாவது நன்மை செய்யவேண்டும்ங்கிற விருப்பத்தோடுதான் பெங்களூரில் உள்ள நித்யானந்தர் ஆசிரமத் தில் சேர்ந்தேன். இந்து மதவளர்ச்சிக்கு அவர் மூலம் என்னை அர்ப்பணித்துக்கொள்ளும் வகையில் தலையில் , சிறு குடுமியளவுக்கு முடியை விட்டுவிட்டு, மற்ற பகுதி களை மொட்டையடிச்சிக்கிட்டேன். காவி கட்டிக் கிட்டேன். ஜட்டி அணியக் கூடாதுஎன்பதால்லங்கோடுக்கு மாறினேன். முஸ்லிம்,கிறிஸ்டியன் என்ற பேதமில்லாமல் எல்லோருக்கும் நம்பிக்கையளிக்கும்விதத்தில் நித்யானந்தா பிரசங்கம் செய்தார். தியானம், யோகா,ஹீலிங் என்றுஉளவியல் சார்ந்த அவரோட செயல் பாடுகள் மன ஆற்றலைமேம்படுத்திக்கொள்வதற்குஊக்கமளித்தது. சரியான இடத்திற்கு வந்திருக்கிறோம்என்ற நம்பிக்கையுடன்ஆசிரமத்தில் இன்னும் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தேன். பல நாடுகளிலும்கிளைகள் விரிந்து, டாலர்களும் யூரோக்களும்கொட்ட ஆரம்பித்ததும் நான்தான்கடவுள் என்றும் சிவனின் அவதாரம் என்றும்பக்தர்களிடம் பிரசங்கம் செய்யஆரம்பித்துவிட்டார். அவர் உட்கார்வதற்குதங்க சிம்மாசனம் உருவாக்கப்பட்டது. ஒன்றல்ல, 10 தங்க சிம்மாசனம்.ஒவ்வொன்றும் தலா 25 லட்ச ரூபாய்மதிப்புடையது. தன்னைசந்திக்க வரும் பக்தர்களைக் கட்டிப்பிடிக்கும் பழக்கத்தையும்ஆரம்பித்தார்.வசூல்ராஜா படத்தில் வருவதுபோல இதுவும் ஒரு கட்டிப்பிடிவைத்தியம்தான் என்றுஆசிரமத்தில் உள்ளவங்க சொன்னாங்க. அதாவது,நித்யானந்தரிடம் உள்ள எனர்ஜி,பக்தர்களுக்கு கிடைப்பதற்காகத்தான் இந்தகட்டிப்பிடி ஃபார்முலா என்றார்கள். அப்படின்னா, எல்லா பக்தர்களுக்கும் எனர்ஜி தரலாமே, ஏன் இளம்பெண்களுக்கு,அதிலும் பணக்காரபெண்களுக்கு மட்டும் இந்த கட்டிப்பிடி ஃபார்முலா என்றுஅவர்களிடம்கேட்டேன். சாமி, எது செய்தாலும் அதில் அர்த்தம் இருக்கும்னுசொன் னாங்க. மாற்றங்கள்ஏற்படுவதை நான் புரிந்துகொண்டேன். இருந்தாலும், நம்பிக்கைகுறைய வில்லை.ஆசிரம சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தேன். நித்யானந்தாதங்கியுள்ளகுவார்ட் டர்சுக்கு அவரோட அனுமதி யில்லாம ஈ-காக்கைகூட நுழையமுடியாது. அந்தஇடத்துக்கு பெண் சாமியார்கள் போயிட்டு வருவதையும்அவங்களில் சிலர்கலங்கியிருப்பதையும் பார்த்தப்ப, ஏதோ மனக் குழப்பத்தில் இருக்காங்கன்னும்,அதற்காகத்தான் நித்யானந்தாகிட்டே போய் எனர்ஜிபெற்றுக்கிட்டுவர்றாங்கன்னும் நினைச்சேன். அதில் ஒரு பெண் சாமியார்ரொம்பவும் கலங்கியிருந்ததைப் பார்த்து அவர்கிட்டே பேசியப்பதான், தவறானஇடத்தில் வந்துமாட்டிக் கொண்டு, ஒரு அயோக்கியனை நம்பி இத்தனை நாளாசேவைபண்ணிக்கிட்டிருக்கோம்ங்கிற உண்மை தெரியவந்தது. அந்தபெண் சீடர் சொன்ன விஷயங்கள் பகீரென்றிருந்தது. யாரையும் தன்குவார்ட்டர்சுக்குள் அவ்வளவு எளிதாக அனுமதிக்காத சாமியார், பெண்சீடர்களில்இளமையான- கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்த அழகான பெண்களைமட்டும்அனுமதிக்கிறார் என்றும், இதற்கு அந்த ஆசிரமத்தில் உள்ள ஒருகேரக்டரேஉதவுகிறது என்றும் அந்த பெண் சாமியார் கண்கலங்கினார். (அந்தகேரக்டரைப்பற்றி அப்புறம் சொல்கிறேன்) பிரசங்கம், ஹீலிங், மெடிடேஷன் என்றபெயரில்அவர்களை வசியம் செய்தபிறகு, அவர்களை குவார்ட்டர்சுக்குள்வரச்சொல்வார். பணிவிடை என்ற பெயரில் இப்படி பல பெண்கள் சென்றாலும், ஒருவர்செல்வது இன்னொரு வருக்குத் தெரியாது. அந்தளவுக்கு நித்யானந்தர்மெயின்டெய்ன்செய்தார். தியானமண்டபத்துக்கு பக்கத்திலிருக்கும் அவருடைய அறைக்கோ அல்லதுஆசிரமத்தில் அவருக்கென்று இருக்கும் பிரத்யேகமான தங்குமிடத்திற்கோபணிவிடைப் பெண்கள்போக வேண்டும். எப்போதும்யாராவதுஒரு பெண்ணை பக்கத்தில்வைத்து தடவிக்கொண்டேதான்இருப்பார். ஒவ்வொருபெண்ணிடமும் தனித்தனியாக கவுன்சிலிங் செய்வார். ஹீலிங்என்ற பெயரில்சகஜமாகத் தொடுவார். தன்னை கிருஷ்ணருடைய அவதாரம் என்றும், தன்னுடன் உள்ளபெண்களை கோபியர்கள் என்றும் சொல்லிக் கொஞ்சுவார். அவர்மீதுள்ளபக்தியினாலும், அவரது மெடிடேஷன் திறமையாலும், குவார்ட்டர்சுக்கு செல்லும்பெண்கள் ஒரு கட்டத்தில், நித்யானந்தரின் எந்த விருப்பத்தையும்நிறைவேற்றும்மனநிலைக்கு வந்துவிடுவார்கள். உணவுபரிமாறுவது, கால் அமுக்கிவிடுவது, மாத்திரை கொடுப்பது என்றுதொடங்குகிறபணிவிடை அப்படியே செக்ஸ் பக்கம் திரும்பும். காமசூத்ரா போன்றபுத்தகங்களைக் கொடுத்துப் படிக்கச் சொல்லு வார். ஆசிரமத்தில் யாரும்டி.வி.பார்க்கக்கூடாது என்று கட்டுப்பாடு உண்டு. நித்யானந்தர் அறையில்டி.வி,டி.வி.டி.பிளேயர் மட்டுமில்லாமல் அந்த மாதிரியான கேசட்டுகளும்இருக்கும்.கிருஷ்ண அவதாரமான தன்னுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ளும் கோபியர், சீக்கிரமாக ஞானம் பெறலாம் என்று சொல்லியே படுக்கைக்கு உடன்படச் செய்துவிடுவார். அப்படித் தான் என்னிடம் பேசிய பெண் சீடரையும்உடன்படவைத்திருக்கிறார். இதையெல்லாம் அவர் என்கிட்டே சொன்னப்ப, இந்தஆசிரமம் ஒருடைட்டானிக் கப்பல். இது மூழ்க ஆரம்பிச்சிடிச்சி. கேப்டன்மட்டுமில்ல, இதிலபயணிக்கிறவங்களும் மூழ்க வேண்டியதுதான். தப்பிக்கமுடிஞ்சவங்கதப்பிச்சுக்குங்கன்னு சொன்னேன். ஏன்னா, அப்பவே என் மனசில் ஒருதிட்டம்உருவாயிடிச்சி. ஆன்மீக சேவைன்னு நம்பி இந்த ஆளால் என்வாழ்க்கையையே தொலைத்துவிட்டேனேங்கிற ஆத்திரம் மனதில் உருவானது. அதைஅடக்கிக்கிட்டு, இந்த அக்கிரமங்களை அம்பலப்படுத்த முடிவு செய்திட்டேன்.அதற்காக 3 மாசம்ப்ளான் பண்ணி, இந்த வீடியோவை எடுத்து முடித்தேன். இதில்எனக்கு ஆசிரமத்துக்குள்ளேயே பலர் ஒத்துழைச்சாங்க. எப்படி எடுத்தோம்ங்கிறதைஅப்புறம்சொல்றேன். ரஞ்சிதாவும்நித்யானந்தாவும் இருக்கிற வீடியோ காட்சிகளை நாடே பார்த்திருக்குது.நித்யானந்தர் குவார்ட்டர்சுக்குள் ஒரு பெண் நுழையணும்னாஅதற்கு எவ்வளவுகாலமாகும்னு ஏற்கனவே சொல்லியிருந்தேன்.ஆனா, நடிகை ரஞ்சிதாவிஷயம்அப்படியல்ல. 2009ல் சென்னையில் நடந்த நித்யானந்தாவின்கல்பதருநிகழ்ச்சிக்கு வந்தார் ரஞ்சிதா. அப்போதே அவருக்கு ஈர்ப்புவந்துவிட்டது. கல்யாண வாழ்க்கையில் நிம்மதியில்லாத ரஞ்சிதா, நித்யானந்தாவை சென்னையில் ஒரு வீட்டில் சந்தித்தார். 10 நிமிஷம் பேசினால் ப்ரெய்ன்வாஷ்பண்ணிவிடும்சக்தி நித்யானந்தாவுக்கு உண்டு. அதில் ரஞ்சிதாகிறங்கிப்போயிட்டார். ரொம்பபவ்யமான பக்தையாக நடந்துக்கிட்டார். அதனால,ரொம்ப சீக்கிரமாஆசிரமத்துக்குள் நுழைஞ்சு, நித்யானந்தாவின் குவார்ட்டர்சுக்குப்பக்கத்திலேயே தங்குற அளவுக்கு ரொம்ப சீக்கிரமா முன்னேறிட்டார். நித்யானந்தாவுக்கும் ரஞ்சிதாவின் பணிவிடைகள் பிடிச்சுப்போனதால, குறுகியகாலத்திலேயே தன்னோட குவார்ட்டர்சுக்குள் அனுமதிச் சிட்டார்.அவங்கஅன்னியோன் யத்தைத்தான் வீடியோவில் பார்த்தீங்க. ஒருரஞ்சிதா மட்டுமல்ல… சாமியாரால் கட்டிலில் தள் ளப்பட்டு, வெளியே தெரியாதபல ரஞ்சிதாக்கள் ஆசிரமத்தில் இருக்கிறார்கள். ஆனால், நடிகைஎன்றுபார்த்தால் ரஞ்சிதா மட்டும்தான்” என்று சொன்ன லெனின் என்கிற நித்யதர்மானந்தா, ஆசிரமத்தில் நடக்கும் மற்ற விஷயங்களையும் சொல்ல ஆரம்பித்தார். “”பிடாடிஆசிரமத்தில் இன்னர் அவேக்கனிங் என்ற புரோகிராம் நடக்கும்.அதாவது, மனதுக்குவிழிப்புணர்ச்சி ஏற் படுத்தும் வகையில் நித்யானந்தர்அருளுரை வழங்குவார்.இது போன்ற ஒரு நிகழ்ச்சிக்கு கனடா நாட்டிலிருந்து ஒருபிரஜை வந்திருந்தார்.ஆசிரமத்தில் உள்ள அனந்தபுரி அபார்ட்மென்ட்டில்தங்கவைக்கப்பட்டிருந்த அவர்காலை 6 மணியளவில் அந்த அபார்ட்மென்ட்டுக்கு கீழே விழுந்துகிடந்தார். பலத்தஅடி பட்டிருந்த அவரை நாங்களெல்லாம் பார்த்தபோது, இரண்டாவது மாடி யிலிருந்துவிழுந்திருக்கிறார் என்றுதெரிந்தது. உடனடியாக அவரை பக்கத் தில் இருந்தபி.ஜி.எஸ்.மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். பரிசோதித்த டாக்டர்கள்,கொண்டுவரும் வழியி லேயே அவர் இறந்து விட்டார் என்று சொல்லிவிட்டார்கள். இறந்துவிட்டார்என்று உறுதி செய்யப் பட்டபிறகும், அந்த மருத்துவமனையின்ஓனரான கர்நாடகாவைச்சேர்ந்த பிரபல சாமியார் பாலகங்காதர் சாமி மூலம்டாக்டருக்குப் பிரஷர்கொடுத்து, பாடியை ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்துட்ரீட் மெண்ட் தர வைத்தார்நித்யானந்தர். அதோடு, ஹார்ட் அட்டாக்கினால்தான்அந்த கனடா நாட்டுக் காரர்இறந்துபோனார் என்று சர்டிபிகேட் கொடுக்கவும்பிரஷர் செய்தார் நித்யானந்தா.அப்படியே சர்டிபிகேட்டும் கொடுக்கப்பட்டது.கீழே விழுந்து அடிபட்டு, ரத்தம் கொட்டி, இறந்து போன வரின் உடலை போஸ்ட்மார்ட்டம்கூட செய்யாமல், ஹார்ட்அட்டாக் என்று சர்டிபி கேட் கொடுக்கவைத்தார் நித்யானந்தா. இந்தவிஷயம் லோக்கல் போலீசுக்கும் தெரிந்துவிட்டது. அவர்கள் விசாரணைக்குவரும்முன்பே, வெயிட்டாக பணம் அனுப்பப்பட்டு விட்டது.விசாரணைமுடக்கப்பட்டுவிட்டது. அதோடு இந்த செய்தி வெளியே வராதபடி சர்வ ஜாக்கிரதையாக மூடி மறைத்து விட்டார்கள் எங்கள் பீடத்து ஆட்களும் போலீசாரும். இறந்தவர்கனடா நாட்டுக்காரர் என்ற போதும், அவரது உடலை பெங்க ளூரிலேயேரகசியமாக எரித்து விட்டார்கள்” என்ற லெனின், எல்லா மட்டங்களிலும் நித்யானந்தரின்தொடர்புகள் விரிந்திருப்பதையும் விளக்கி னார். “”மெடிடேஷன்ங்கிறதுஒரு கலை. என்னைப்போன்ற பலர் அதை கற்றிருக்கிறார்கள்.ஆனா, நித்யானந்தா அதைஆன் மீகத்தோடு சேர்த்து வசியம் செய்ய ஆரம்பித்துவிட்டார். அவருடைய மெடிடேஷன், ஹீலிங் மூலம் உடல்நலன் குணமாவதாபலருக்கும் நம்பிக்கை வந்தது.இதன் மூலம் 60% பேருக்கு உடல் நலன்சரியாகும் என்பது உண்மை தான். நித்யானந்தர் அதையே தன்னோட பவரா காண்பிச்சிக் கிட்டார். அதனால பல வி.வி. ஐ.பிக்கள் அவரோட டிவோட்டி ஆயிட்டாங்க. கர்நாடகமுதல்வரில் தொடங்கி, அமைச் சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள்,அரசு அதிகாரிகள் என்று பலரும் நித்யானந்தரின் பிறந்த தினகொண்டாட்டங்களுக்காகஆசிரமத் திற்கு வந்து போவதால், போலீசார் எப்போதுமேஆசிரம விஷயத்தில் அடக்கியே வாசிப்பார்கள். கர்நாடக முன்னாள் முதல்வர்எஸ்.எம் கிருஷ்ணாவின்மனைவிக்கு ஹீலிங் மூலம் சிகிச்சை தந்தார்நித்யானந்தா. அதனால கிருஷ்ணாஆட்சியில் நித்யானந்தா ஆசிரமம் ஓஹோன்னு வளர்ந்திடிச்சி. மத்திய மந்திரிகள்பலரும் நித்யானந்தருக்குப் பக்தர்கள்.உங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருசில மந்திரிகளையும் உயரதிகாரிகளையும்கூட எங்கள் ஆசிரமத்தில் பார்த்திருக்கிறோம். ஸ்டேட், சென்ட்ரல் என்றுஎல்லா இடத்திலும் தனது பக்தர்கள்இருப்பதால், எல்லா அக்கிரமத்தையும்துணிச்சலாகவே செய்வார் நித்யானந்தா.இங்கே நடக்கிற குற்றங்களையெல்லாம் மறைப்பதுதான் நித்யானந்தரின் செயலாளர்ஸ்ரீநித்ய சதானந்தா, பி.ஆர்.ஓ.நித்ய சேவானந்தா ஆகியோருக்கு முழுநேர வேலை.ஆசிரமத்தில் நடக்கும் குற்றங்களால் அதிக பாதிப்புக் குள்ளாகிறவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த இளம்பெண்கள்தான்” என்ற பகீர் தகவலையும் சொன்னார்லெனின். “”லைஃப் ப்லிஸ்டெக்னாலஜி என்ற இலவச வகுப்பு இந்த ஆசிரமத்தில் ரொம்பபாப்புலர். அதில்கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டி லிருந்தும் மற்றமாநிலங்களிலிருந் தும்ஏராளமான இளம்பெண்களும் இளைஞர்களும் வருவார்கள்.இலவச வகுப்புமுடித்துவிட்டுப் போய் விடலாம் என்றுதான் அவர்கள்நினைத்திருப்பார்கள்.ஆனால், அவர்களை மூளைச் சலவை செய்து ஆசிரமத்திலேயேதங்கவைத்து விடுவார்கள்நித்யானந்தாவும் அவரது சீடர்களும். இப்படி இந்தஆசிரமத்தில் தற்போது சுமார்70 பிரம்மச்சாரிகளும் 50 பிரம்மச்சாரினிகளும்இருக்கிறார்கள். இதில் பலர்தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இலவசவகுப்புக்குப் போன தங்கள் பையனோ பெண்ணோ திரும்பி வருவார்கள் எனக்காத்திருக்கும் பெற்றோர், பிள்ளைகள் வரவில்லை என்றதும் பதறியடித்துக் கொண்டுஇங்கே வருவார்கள். ஆனால், அவர்களை ஆசிரமத்து ஆட்கள் மதிக்கவேமாட்டார்கள்.சரியாகப் பதில் சொல்ல மாட் டார்கள். பிள்ளைகளை ஆசிரமத்திலேயே தங்க வைக்கபெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாதாடினால், அவர்களின்பையனையோ பெண்ணையோ ஆசிரமக்காரர்கள் அழைத்துக்கொண்டு வருவார்கள். அந்தப்பிள்ளைகள் வாயா லேயே,நாங்க இங்கதான் இருப்போம் என்று சொல்ல வைப்பார்கள். அந்தளவுக்குநித்யானந்தாவின் வசிய வேலைகள் நடந்திருக்கும். வீட்டுக்கு வரமறுக்கும்பிள்ளைகளை அவர்களது பெற்றோரோ, உறவினர்களோ வற்புறுத்தி அழைத்தால், அவர்களைஆசிரமக்காரர்கள் அடித்து விரட்டி விடுவார்கள். இந்தசம்பவங்கள்பற்றியெல்லாம் நிறைய புகார்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. தமிழக ஸ்டேஷன்களிலும் கம்ப்ளைண்ட் கொடுக் கப்பட்டிருக்கிறது. ஆனால், தன்பவர்மூலம் எல்லாவற்றையும் சமாளித்து விட்டார் நித்யானந்தா. தமிழ்நாட்டைச்சேர்ந்த 22 வயது பிரம்மச்சாரினி, தற்கொலைக்கு முயன்றசம்பவம் ஆசிரமத்தில்உள்ள எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்துவிட்டது.ரொம்பவும் வெகுளியான அந்தப்பெண்ணால், நித்யானந்தாவின் செக்ஸ்டார்ச்சர்களைத் தாங்க முடியலை. நடந்ததைநினைத்து நினைத்துஅழுதிருக்கிறார். இனிமேல் இங்கிருந்து தப்பிக்க முடியாதுஎன்றுதான் அந்தப்பெண் தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார். இந்தவிவகாரத்தையும் அமுக்கி, அந்தப் பெண்ணை சத்தமில்லாமல் அவளுடையவீட்டுக்குஅனுப்பிவைத்துவிட்டார்கள். வழக்கம்போல, போலீஸ் கேஸ்வராமலும்பார்த்துக்கொண்டது ஆசிரம நிர்வாகம். கனடாநாட்டைச் சேர்ந்தவர் மாடியிலிருந்து விழுந்து மர்மமான முறையில்மரணமடைந்தஒரு வாரத்தில், 18 வயது பெண் சந்நியாசி பூச்சி மருந்துகுடித்துதற்கொலைக்கு முயன்றார். இவரையும் பி.ஜி.எஸ்.மருத்துவமனைக்குத்தான் கொண்டுசென்றார்கள். மூச்சு பேச்சில்லாமல் 10நாட்கள் கோமாவில் கிடந்தார் அந்தப்பெண். இது சம்பந்தமாக பிடாடி, கெங்கேரிஇரண்டு காவல் நிலையங்களிலும்வழக்குப் பதிவு செய்யப் பட்டபோதும் எந்த நடவடிக்கையும் எடுக் கலை. போனடிசம் பர் 24ந் தேதிகூட ஒரு சந்தியாசி இளைஞர் 14 தூக்கமாத்திரைகளைச்சாப்பிட்டு தற் கொலைக்கு முயன்றார். என்ன காரணம் என்றால்,டிசம்பர் 23ந்தேதி முதல் ஜனவரி 1ந் தேதி வரை ஆசிரமத்தில் பிரம்மோத்சவத்தைநித்யா னந்தாநடத்துவார். அதற்கானதொடக்க ஏற்பாடுகளை சரியாகச் செய்யவில்லை என்று, அந்த இளைஞரை கடுமையாகத்தாக்கிவிட்டார் நித்யானந்தா. அதனால்தான் அந்த இளைஞர், மாத்திரைகளைச் சாப்பிட்டார். வழக்கம்போலபி.ஜி.எஸ். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு போலீஸ் கேஸ்இல்லாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது என்று நம்மிடம் விரிவாக விளக்கியலெனின், ஆசிரமத்தில் உள்ள இளம் பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர் என்றால்,இளைஞர்களுக்கு அடி-உதைதான். நித்யா னந்தாவே ஒரு மூங்கில் குச்சியைஎடுத்துவந்து,இளைஞர் களைக் கடுமையாகத் தாக்கு வார். அடி வாங்கினால் அந்தஇளைஞர் கொடுத்துவைத்தவர், சாமியே அடித்துவிட்டார் நமக்கு அந்த வாய்ப்புகிட்ட வில்லையேஎன்று மற்றவர்கள் ஏங்குவார்கள். அந்தளவுக்கு அவரை கடவுளாகஎல்லோரும் நினைத்தார்கள். ஒருசிலர்முகம் சுளித்தால், அந்த இளைஞர் குரு துரோகம் செய்துவிட்டதாகவும்,பாவத்திலேயே பெரிய பாவமே குரு துரோகம் தான் என்றும் ஆசிரமத்திலிருந்துபதில் வரும். ஆனால், குரு செய்கின்ற பெரிய பாவம் எதற்கும்எந்தத்தண்டனையும் கிடையாது. குருதுரோகத் திற்கான தண்டனையை இந்தஜென்மத்தில் மட்டுமல்ல, அடுத்தடுத்த ஜென் மங்களிலும் அனுபவிக்க வேண்டும்என்று தன்னுடையசீடர்களையும் பக்தைகளையும் மிரட்டி வைப்பார் நித்யானந்தா. இவர்களிடம் பல பெண்களும் ஆண்களும் சிக்கிக்கொண்டு இருக்கிறார் கள். உண்மைகளை வெளியே சொன்னால் உயிருக்கு உத்தரவாதமில்லை என்ப தால்தான் எல்லோரும் பேசாமல் இருந்தோம். இப்போது,சாமியாரின் லீலைகள் வீடியோவாக வெளியாகி, அவருடைய யோக்கியதையை எல்லோரும் பார்த்து விட்டார்கள். இன்னும் பல பெண் சீடர்களுடன் நித்யானந்தாபரமானந்தமாகஇருக்கும் ஆதாரங்கள் இருக்கின் றன. இனிமேலாவதுநடவடிக்கை எடுத்து, ஆசிரமத்தில் சிக்கியிருக்கும்நூற்றுக்கும் அதிகமானவர்களை மீட்க வேண்டும். நக்கீரனால் அது முடியும்”என்ற லெனின்என்கிற ஸ்ரீநித்ய தர்மானந்தாவின் கண்களில் நம்பிக்கை தெரிந்தது. “”இன்னும் பல விஷயங்கள் இருக்கு. அடுத்த சந்திப்பில் சொல்கிறேன்” என்று விடைபெற்றார். திருவண்ணாமலையில்பிறந்த ராஜசேகரன், குடியாத்தத்தில் டிப்ளமோ படித்து, 16வயதில்வீட்டைவிட்டு ஓடினார். கன்னியாகுமரி யிலிருந்து இமயமலை வரை 9வருடங்கள்நடந்தே சென்று, பிச்சை எடுத்து சாப்பிட்ட தனக்கு, புத்தாயிரம்தினமான2000-ஜனவரி 1-ந் தேதி ஞானம் பிறந்ததாகச் சொல்லி நித்யானந்தாவானராஜசேகரன்,2003-ம் ஆண்டில் ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் முதல்ஆசிரமத்தைஅமைத்தார்.  ஆன்மீகப்பிரசங்கம் செய்வதில், உரையாற்றுவதில் வல்லவரான நித்யானந்தர்,தியானம்,யோகா, ஹீலிங் இந்த மூன்றிலும் சிறப்பாக பயிற்சி தரக்கூடியவர்.தற்போது 33நாடுகளில் இயங்கும் 1500 கிளை களையும் சேர்த்து இவரது சொத்துமதிப்பு 2000கோடி ரூபாயைத் (20ஆயிரம் கோடி என்றும் சொல்கிறார்கள்)தாண்டும்என்கிறார்கள். இதன் சார்பில் 8-க்கும் மேற்பட்ட டிரஸ்ட்டுகள்இருக்கின்றன.பல்லா யிரம் கோடி வருமானம் வந்தாலும்அதில் 50% மட்டுமேகணக்கில்காட்டப்படுகிறதாம். வரி ஏய்ப்பு விவரங்களையும் தோண்டினால் அதுதனிக்கதை.கணக்கில் காட்டப்படாத கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும்லாக்கர்கள்பிடாடி ஆசிரமத்தில் உள்ள ஆனந்த நிலையக் கட்டிடம்,நித்யானந்தரின் தனிதங்குமிடம், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மென்ட், அனந்தபுரிஅபார்ட்மென்ட், பலஊர்களிலும் நித்யானந்த தியானபீடத்துக்காகஎடுக்கப்பட்டிருக்கும் தனியார்அபார்ட்மென்ட்டுகளிலும் கறுப்பு பணம்பதுக்கிவைக்கப்பட்டிருப்ப தாகசொல்கிறார்கள். திருவண்ணா மலையைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த 32 வயதுக்காரர், தன் பெயரில்நித்யானந்த தியான பீடம் என்ற ஆன்மீக அமைப்பை நடத்திவருகிறார்.  சத்தியமாகஇவருக்கு 32 வயதுதான் என்ற அவரது சிஷ்யர்கள் அவரது பிறந்ததேதி 1-1-1978என்பதற்கான ஆதாரத்தை நம்மிடம் காட்டியதோடு, 33 நாடுகளில் 1500 கிளைகளுடன்பல லட்சம் பக்தர்கள் பரமஹம்ச நித்யானந்தரைப் பின்பற்றுவதாகவும்சொன்னார்கள்.நித்யானந்த தியான பீடத்தின் கிழக்கத்திய தலைமையகமாக இருப்பது பெங்களூருபிடதியில் உள்ள மையம். மேற்கத்திய நாடுகளின் தலைமையகம், அமெரிக்காவின்லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளது. தமிழகத்தின் பல ஊர்களிலும் இந்த ஆன்மீகஅமைப் புக்கு கிளைகள் இருப்பதுடன் லட்சக்கணக்கான பக்தர்களும் இருக்கிறார்கள். தியானம், யோகம் உள்ளிட்டவை நித்யா னந்தரின் தியானபீட கிளைகளில் கற்றுத்தரப்படுகிறது. தொடுதல் கலையான ஹீலிங் முறையில் நித்யானந்தர் எக்ஸ்பர்ட்என்கிறார்கள் அவரது வெளிநாட்டு பக்தர்கள். கிழக்கத்திய தலைமையகமாக உள்ள பெங்களூரு பிடதி ஆசிரமம் 30 ஏக்கர்பரப்பளவில் அமைந்துள்ளது. இதில், 20 அடி உயர காம்பவுண்டு எழுப்பப்பட்ட 3ஏக்கர் பரப்பளவில் பரமஹம்ச நித்யானந்தரின் குவார்ட்டர்ஸ் உள்ளது. இந்தகுடியிருப்புக்குள் அவரது அனுமதியின்றி ஒருவரும் நுழைய முடியாது.மிகவும் கட்டுப்பாடு நிறைந்த இந்த குடியிருப்புக்குள் ஆன்மீக சாமியாராகஉலாவும் நித்யானந்தருடன் அவரது பக்தரும் தமிழ்த் திரையுலகில் பிரபலநடிகையாக விளங்கியவரும் தற்போது டி.வி சீரியல்களில் முக்கிய பங்குவகிப்பவருமான ரஞ்சிதா அன்னியோன்யமாக உள்ள வீடியோ காட்சிகள் 20 நிமிடம் 5செகன்ட் பதிவாகியுள்ளது

SHARE