நிரந்தர நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்!- சமந்தா பவரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

222

நாட்டில் நிரந்தர நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக கடந்த 10 மாதங்களாக இந்த அரசாங்கம் முன்னெடுத்த செயற்பாடுகளை வரவேற்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்காவிற்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் இன்று சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, வெளிவிவகார நடவடிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் ஒஸ்டின் பெர்னாண்டோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்ததாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இந்த அரசாங்கம் நம்பிக்கையான முறையிலும், ஏற்றுக்கொள்ளத்தக்க முறையிலும், செயற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையில் உள்ள உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என இதன்போது சமந்தா பவர் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

SHARE