நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, கலஹா, அப்பர் கலஹா பிரதேசத்தில் வீடுகள் பாரிய அளவில் வெடித்து நிலம் தாழ் இறங்கியுள்ளது.
இதனால் 37 குடும்பங்களை சேர்ந்த 110 பேர் இடம்பெயர்ந்து தோட்ட பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் லயன் இலக்கம் 03 மற்றும் 04 ஆகியன பாரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த பிரதேசங்களில் வாழும் மக்களை வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தலை வழங்கியுள்ளனர்.
இதேவேளை, லயன் இலக்கம் 01, லயன் இலக்கம் 02, மற்றும் 04 குடியிருப்புக்களில் உள்ள மற்றுமொரு வீட்டு தொகுதி மக்களும் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக வெளியேற்றபட்டுள்ளனர்.
தற்போது கிராம சேவகரின் உதவியுடன் பிரதேச செயலகம் இடம் பெயர்ந்த மக்களுக்கு தேவையான வசதிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.