ஒரு நாள் கூத்து படத்திற்கு பிறகு நடிகை நிவேதா பெத்துராஜ் பல படங்களில் கமிட்டாகி தொடர்ந்து நடித்து வருகிறார்.
தற்போது அவர் சமூக வலைத்தளங்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
கோவிலுக்குள் செல்போன் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதுடன் சோதனைக்கு பிறகு தான் அனைவரும் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். நிவேதா பெத்துராஜ் மட்டும் எப்படி செல்போன் எடுத்துச்சென்றார் என பலரும் தற்போது கேள்வி கேட்டு வருகின்றனர்.
நடிகை என்பதால் இப்படி ஒரு சலுகையை என விமர்சனமும் எழுந்துள்ளது.