நீச்சல் தடாகத்தில் விழுந்து சிறுவன் பலி

291

ஆறு வயது சிறுவனொருவன் நீச்சல் தடாகத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

பதுரலிய பிரதேசத்திலேயே இந்த சம்பவம் நேற்று (14) இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுவன் உறவினர்கள் சிலருடன் சுற்றுலாவிற்காக அப்பிரதேசத்துக்கு வருகை தந்துள்ளதாகவும், இதன்போது அங்குள்ள விடுமுறை விடுதியொன்றில் உள்ள நீச்சல் தடாகத்தில் விழுந்தே சிறுவன் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

பாயகல பாலயன்கொட பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள பதுரலிய பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

DSC_1097

 

SHARE