
அஞ்சாதே, கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் அஜ்மல். இவர் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘செகண்ட் ஷோ’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.
முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கபடவுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக டார்க் ரூம் கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது. சஸ்பென்ஸ், த்ரில்லர், பேண்டஸியாக உருவாகும் இப்படத்தை ஏ.டி.ஞானம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

அஜ்மலுடன் இப்படத்தில் பல்லவி சுபாஷ், அக்ஷதா சோனவானே, பூஜா மான்டலே, ஹேமல், வித்யா, பிளாக் பாண்டி, இஷா சப்ரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.