நீதிமன்றத்தில்  பசில் ராஜபக்ச ஆஜர்

277

 

நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச  சற்று முன்னர் கடுவல நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

 

திவிநெகும திணைக்களத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் நிதி மோசடித் தொடர்பில் கடந்த 22 ஆம் திகதி கடுவெல நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பசில்,இன்று வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

basiol

எனினும் சிறைச்சாலையில் ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அவருடன் கைது செய்யப்பட்ட திவிநெகும திணைக்களப் பணிப்பாளர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆகியோரும் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர்.

 

 

SHARE