நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்படும் கலகொட அத்தே ஞானசார தேரர்

272
பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பிலேயே இவர் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்த சம்பவம் தொடர்பில் கடந்த 9ஆம் திகதி பிணை வழங்கப்பட்ட போதும், சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் மீண்டும் விளக்க மறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

galabodaaththe-gnanasara-thero

SHARE