நீரிழிவு நோயாளிகளே கறிவேப்பிலை சாதம் சாப்பிடுங்கள்!

330

நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலையையு‌ம், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டுமென்று சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல், ர‌த்‌தத்தி‌ல் ச‌ர்‌க்கரை‌யி‌ன் அளவு க‌ட்டு‌ப்படு‌ம்.

வெறும் வயிற்றில் ‌தினமு‌ம் கறிவேப்பிலை இலையை மெ‌ன்று சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம்.

தொடர்ந்து, 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் பருமனாவது த‌வி‌ர்‌க்க‌ப்படு‌ம். சிறுநீரில் சர்க்கரை வெளியேறு‌ம் அளவு‌ம் குறை‌ந்து‌விடு‌ம்.

இளம் வய‌தி‌ல் நரை முடி வ‌ராம‌ல் தடு‌க்க க‌றிவே‌ப்‌பிலை பய‌ன்படு‌ம் என்பது தெ‌ரி‌ந்த ‌விடய‌ம்.

அதாவது, நரை முடி வ‌ந்தவ‌ர்களு‌ம், உண‌விலு‌ம், த‌னியாகவு‌ம் க‌றிவே‌ப்‌பிலையை அதிகமாக சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் முடி கருப்பாகும்.

கறிவேப்பிலையில் விட்டமின் ஏ, பி,பி2, சி போன்ற உயிர்சத்துக்கள் நிரம்பியுள்ளன. சுண்ணாம்புச் சத்தும் இரும்புச் சத்தும் அதிகம் உள்ளன.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக மயக்கத்துக்கு ஆளாவார்கள்.மேலும் கைகால் வலி கண்பார்வைகுறைபாடு உண்டாகும்.

இவர்கள் அடிக்கடி கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

கறிவேப்பிலை சாதம்

பச்சரிசியை நன்றாக அலசி சுத்தம் செய்துபோதுமான அளவு தண்ணீர் விட்டு உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.

கறிவேப்பிலையை உருவிக் கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு நெய் விட்டு சூடாக்கவும். நெய் சூடானதும் உருவி வைத்திருக்கும் கறிவேப்பிலையை போட்டு மொறுமொறுப்பாக வறுத்து பொடி செய்துகொள்ளவும்.

வாணலியில் போதுமான அளவு நெய்யை விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து முந்திரிப் பருப்பு, கடலைப் பருப்பு சிவக்க வறுக்கவும்.

இவற்றை உதிரியாகப் பரப்பி வைத்திருக்கும் சாதத்தில் கலந்து கறிவேப்பிலைத்தூள், மிளகுத்தூள், உப்புத்தூள் ஆகியவற்றையும் சேர்த்து நன்றாகக் கிளறி சூடாகப் பரிமாறவும்.

சத்தான கறிவேப்பிலை சாதம் ரெடி.

SHARE