நீரிழிவு- மாரடைப்பு நோய்க்கு தீர்வாகும் ஒர் அற்புத பொருள் இதுதான்

174

அன்றாடம் நாம் சாப்பிடக் கூடிய உணவில் உள்ள கரையும் நார்ப்பொருட்கள் இதயத்தில் கொழுப்பு படியாத தன்மையை ஏற்படுத்துகிறது.

அதுவே கரையாத நார்பொருளாக இருந்தால், அது மலச்சிக்கல் பிரச்சனையை நீக்குவதுடன், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுபாட்டில் வைத்திருக்க உதவுகிறது.

அந்த வகையில் வெந்தயத்தில் இருக்கும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தருகிறது.

வெந்தயத்தின் மருத்துவ நன்மைகள்
  • அன்றாடம் வெந்தயத்தை நம்முடைய உணவில் சேர்த்துக் கொண்டால், அது நமது உடம்பில் ரத்தத்தில் உள்ள உப்பு சத்தை மாற்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
  • வெந்தயத்தை தினமும் தங்களின் உணவில் சேர்த்து கொள்வதால், நீரிழிவு, ரத்த கொதிப்பு, மாரடைப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.
  • வெந்தயக் கீரை நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. எனவே இரண்டு அவுன்ஸ் அளவு வெந்தயத்தை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்வதால், உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறையும்.
  • வெந்தயத்தை மோரில் ஊற வைத்து, அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி பளபளப்பாக, கண்களுக்கு குளிர்ச்சியாக இருப்பதுடன், பொடுகு பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
  • வெந்தயத்தை நெய்யில் வறுத்து, அதனுடன் சிறிது சோம்பு மற்றும் உப்பு சேர்த்து அரைத்து, அதை மோரில் கலந்து சாப்பிட்டால், பேதி, சீதபேதி போன்ற பிரச்சனைகள் வராது.
  • அரிசியுடன் சிறிது வெந்தயம் சேர்த்து, அதில் பூண்டை தட்டி போட்டு கஞ்சி வைத்து குடித்தால், செரிமான பிரச்சனைகள் ஏற்படாது. இளம் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
  • வெந்தயம் சிறுநீரகக் கற்களைக் கரைக்க கூடியது. அல்லது கற்கள் வராமல் தடுக்க கூடியது. சிறுநீரைப் பெருக்கி கற்கள் உருவாவதைத் தடுக்கிறது.
SHARE