நீர்வேலி சிறுமியின் மருத்துவப் பரிசோதனை அறிக்கையை கோரும் நீதிமன்றம்!

200

யாழ்ப்பாணம், கோப்பாய் பிரதேச நீர்வேலி பகுதியில் சிறிய தாயின் தாக்குதலுக்கு உள்ளான சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு யாழ் பதில் நீதவான் கே. அரியநாயகம், கோப்பாய் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சிறுமியை கோப்பாய் பொலிஸார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தாக்குதுலுக்கு உள்ளான சிறுமி, சிறுமியை தாக்கிய தாய் மற்றும் தந்தை ஆகியோர் இன்று யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்தனர்.

சிறுமி தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதால் சிறுமியின் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், தழும்புகள் மற்றும் மனநிலை ஆகியவற்றை ஆராய்ந்து தீர்ப்பளிக்க வேண்டும் என்பதால், சிறுமியை சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை சமர்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தாய் மற்றும் தந்தையிடம் மேலதிக விசாரணைகளை நடத்துமாறும் நீதவான், கோப்பாய் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

சிறுமி தற்போது கோப்பாய் பொலிஸாரின் பாதுகாப்பில் இருந்து வருகிறது.

SHARE