நீர் வடிகாலமைப்பு பற்றிய பொதுக்கூட்டம் இன்று ( 03.10.2015 ) வவுனியா பிரதேசசெயலக பொது மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரௌவ் பக்கீம்இ K.K மஸ்தான் ஆகியோரும் வடமாகாண சபை உறுப்பினரான தர்மபாலா அவர்களும் கலந்து கொண்டனர். மேலும் நீர்ப்பாசன சபை உறுப்பினர்களும் காணி விவகார அதிகாரிகளும் கிராம சேவகர்கள், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்களும் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் ரௌவ் பக்கீம் அவர்கள் கூறுகையில் வவுனியாவில் தற்போது 4% அளவிலே நீர்வடிகாலமைப்பு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 4 ஆண்டுகளில் அதனை 40% ஆக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறினார்.
மேலும் விவசாயிகளும், பொது மக்களும், வைத்தியர்களும் ,உதவி பிரதேச செயலாளர்கள் தமது கோரிக்கைகளை முன் வைத்தனர் அந்த வகையில் பொது மக்கள் ரீதியில் ஒருவர் கூறுகையில் தமது பல காணிகளும் கோயில் நிலங்களும் அரசினால் அபகரிக்கப்பட்டதாகவும் மேலும் தமக்கு அக்காணிகளுக்குப் பதிலாக வேறு காணிகள் வழங்குவதாக கூறியும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டது. அத்துடன் உதவி பிரதேச செயலாளர் ஒருவர் கூறுகையில் மன்னார் பிரதேசத்திற்கு அருகிலுள்ள பல காணிகள் காடுகளாக மாறியுள்ளதாகவும் அவை அணைத்தும் அரசு காணிகளாக காணப்படுகின்ற போதும் அதனை காணி இல்லாத மக்களுக்கு வழங்க முடியாமல் உள்ளதாகவும் குறிப்பிட்டார். இவ்வாறான பல குறைகள் முன்வைக்கப்பட்டது. இதற்கான தீர்வினை தாம் பெற்றுத்தறுவதாக ரௌவ் பக்கீம் அவர்கள் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.