நெடுங்கேணி மத்திய பேரூந்து நிலையத்தில் பொது மலசலகூடங்கள் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகின்றது

183

பேரூந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட பொது மலசல கூடங்களுக்கான நீர் விநியோகம் கடந்த ஒரு வாரகாலமாக உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், பொதுமக்கள் மலசலகூடத்தை பாவித்துவிட்டு நீர்ஊற்ற முடியாத நிலையில் இருப்பதனால், மலசலகூடம் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுவதனால் வேறு நபர்கள் அதைப் பயன்படுத்தமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதோடு, இதனைப் பிரதேசசபையிடம் தொடர்புகொண்டு வினவியபோது, நடைமுறைப்படுத்துவதாகக் கூறப்பட்டபோதிலும், மாலை 6.00 மணியிலிருந்து காலை 10.00வரை மலசலகூடங்களுக்கான நீர்த்தொட்டி இருந்தபோதிலும் அதற்கான நீரினை உரிய முறையில் விநியோகப்படுத்த முடியாத நிலைக்கு வவுனியா வடக்கு பிரதேச சபை செயற்படுவதனால் இச் சுகாதாரமற்ற நிலையாக மலசலகூடங்கள் காணப்படுகின்றது. இதனைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கொண்டு வந்து இதற்கான நீரினை உரிய காலப்பகுதிகளில் விநியோகம் செய்து தரும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோபிகா, புளியங்குளம்.

unnamed-3

SHARE