நெருப்புடன் நெருப்பு மோதுவது போன்றது – சொல்கிறார் ரோஹித் சர்மா

324
இந்தியா- அவுஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் நெருப்புடன் நெருப்பு மோதுவது போன்று விறுவிறுப்பாக இருக்கும் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியா சென்றுள்ளது.

இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் எதிர்வரும் 12ம் திகதி தொடங்குகிறது.

இந்த தொடருக்கு முன்னதாக தற்போது இந்தியா இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.

இந்நிலையில் அவுஸ்திரேலிய தொடர் பற்றி ரோஹித் சர்மா கூறுகையில், ‘‘இந்தியா- அவுஸ்திரேலிய தொடர் நெருப்புடன் நெருப்பு மோதுவது போன்றது.

இரு அணிகள் மோதிய வரலாற்றை பார்த்தால் தாங்கள் வெற்றி பெற வேண்டும் என இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடியது தெரியும்.

கடந்த 2014ம் ஆண்டு இங்கே விளையாடிய போது தொடரை கைப்பற்ற மிகவும் நெருங்கி வந்தோம். கடைசி வரை போராடிய நிலையிலும், தொடரை கைப்பற்ற முடியாமல் போனது.

நாங்கள் இங்கு சிறப்பாக விளையாடி இருக்கிறோம். எதை செய்ய விரும்புகிறோமே, அதை இந்த முறை சிறப்பாக செய்து முடிப்போம்” என்று கூறியுள்ளார்.

SHARE