காலபோக நெற்செய்கையை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கு பாண்டியன்குளம் கமநல சேவை நிலையத்தினால் வழங்கப்படும் விவசாய உள்ளீட்டுப் பொருட்களான பசளைகள் உரிய முறையில் பெற்றுக்கொள்ளவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
பசளை விநியோகத்திற்காக குறிக்கப்பட்ட காலப்பகுதியில் கமநலசேவை நிலையத்தில் விநியோகத்திற்கான பசளைகள் இல்லாத நிலையில் பல விவசாயிகள் பலதடவைகள் திருப்பிஅனுப்பப்பட்டிருந்ததாகவும் அறியமுடிகிறது.
பல விவசாயிகள் பகுதிபகுதியாக பசளைகளை பெற்றிருந்தாலும் முழுமையாக பெறவில்லை எனவும் தெரிவிக்கின்றார்கள்.
கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக அழிவடைந்த வயல்களில் மீளவும் பயிற்செய்கை செய்துள்ள விவசாயிகள் பாரிய இடைஞ்சல்களை எதிர்நோக்குகின்றனர்.
எனவே, காலபோக பயிற்செய்கைக்காக வழங்குவதற்காக களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கின்ற பசளைகளை காலதாமதமில்லாமல் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு ஏற்ற நடவடிக்கையினை மேற்கொள்ளவேண்டுமென கமநலசேவை திணைக்கள ஆணையாளரினையும் மாவட்ட அரசாங்க அதிபரையும் மக்களுடைய பிரதிநிதிகளையும் வினையமாக விவசாயிகள் வேண்டுகின்றனர்.