நேரலையில் பெண் கேட்ட கேள்வி… கடுப்பில் தனுஷ் செய்த காரியம்

188

தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது சுசீலீக்ஸ், குடும்ப பிரச்சனை குறித்து கேள்வி கேட்கப்பட்டதால் தனுஷ் கோபப்பட்டு பாதியில் கிளம்பிச் சென்றுள்ளார்.

விஐபி 2 படத்தை விளம்பரப்படுத்த தனுஷ், கஜோல், சவுந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் ஹைதராபாத் சென்றனர். அப்போது தனுஷ் பிரபல தெலுங்கு சேனலுக்கு அளித்த பேட்டி எதிர்பாராத விதமாக பாதியில் முடிந்துள்ளது.

சுசீ லீக்ஸ் பரபரப்பான போது தனுஷின் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் தனுஷை பேட்டி எடுத்த பெண் சுசீ லீக்ஸ் பற்றியும், தனுஷ், ஐஸ்வர்யா இடையே பிரச்சனையாக இருப்பதாக வெளிவந்த கிசுகிசு பற்றியும் கேள்வி கேட்டுள்ளார்.

சுசீ லீக்ஸ் மற்றும் குடும்ப பிரச்சனை போன்றவை முட்டாள்தனமாக கேள்விகள் என்று கூறி தனுஷ் பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்றுவிட்டார்.

தனுஷ் பேட்டியில் இருந்து கிளம்பிச் சென்ற காடசி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாடகி சுசித்ரா தனுஷ் ஆட்களால் தாக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்ட பிறகு தான் சுசீ லீக்ஸ் புயல் கிளம்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE