ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பசில் ராஜபக்சவுக்கு இடையிலான அரசியல் கொடுக்கல் வாங்கல் காரணமாக இதுவரையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவடைவது உறுதி என கட்சி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ரணில் மற்றும் பசிலுக்கு இடையிலான அரசியல் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு அறிவித்ததாக கடந்த வாரம் செய்தி வெளியாகியது.
அதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்துவதற்கான திட்டம் ஒன்று மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது. எப்படியிருப்பினும் மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித்த ராஜபக்ச கைது செய்யப்பட்டதும் அதற்கமைய இடம்பெற்ற செயற்பாடென தகவல் வெளியாகியுள்ளமையினால் ராஜபக்ச குடும்பத்தினுள் கொந்தளிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்மூலம் மஹிந்த ராஜபக்சவின் கூட்டு எதிர்க்கட்சியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணக்கப்பாட்டிற்கு வருவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து கலந்துரையாடல்களும் இடை நிறுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பசில் ராஜபக்சவின் அரசியல் முடிச்சு என நாமல் ராஜபக்ச மற்றும் ஷிரந்தி ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளதாக குடும்ப தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
எப்படியிருப்பினும் பசில் ராஜபக்ச மற்றும் யோஷித்த ராஜபக்சவுக்கு இடையில் கடுமையான மோதல் நிலை ஒன்று காணப்பட்டதாக கடந்த காலங்களில் ஊடகங்களில் செய்தி வெளியாகின.
ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்தமைக்கு பசில் ராஜபக்ச நேரடியாக பொறுப்பு கூற வேண்டும் எனவும், இனி ஒரு போதும் தங்கள் வீட்டு பக்கம் வந்து விட வேண்டாம் என யோஷித ராஜபக்ச உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.