பசில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில்

220

download-2

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

விமானப் படை விமானங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் வாக்கு மூலம் அளிப்பதற்காகவே இவர் இன்று (23) முன்னிலையாகியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மூத்த நடிகர் ஜெக்சன் அந்தோணியிடம் இன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுக திறப்பு விழாவின் போது இடம் பெற்ற நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக ஜெக்சன் அந்தோணி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானமை குறிப்பிடத்தக்கது.

SHARE