விஷால் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். சினிமா மட்டுமின்றி மக்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது சென்னை மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து தன்னால் முடிந்த உதவியை ஓடி ஓடி செய்கிறார்.
இந்நிலையில் கதகளி படத்தின் டப்பிங் வேலை மீதமிருக்க, படமா முக்கியம்? மக்கள் குறை முதலில் தீரட்டும் என களத்தில் இறங்கி வேலை செய்து வருகிறார். சபாஷ் விஷால்.