பட்டதாரிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது லங்காசிறி ஊடகவியலாளர் சேகு சதகத்துல்லா கடுமையான தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளார்.

329

 

கொழும்பு – கோட்டை பகுதியில் இன்று வேலையில்லா பட்டதாரிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது லங்காசிறி ஊடகவியலாளர் சேகு சதகத்துல்லா கடுமையான தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதிமன்ற உத்தரவை மீறி பிரவேசிக்க முயற்சித்த வேளையில் கலகத் தடுப்பு பிரிவினரால் நீர் தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் நடாத்தப்பட்டிருந்தது.

இதன்போது செய்தி சேகரிப்பதற்காக சென்றிருந்த லங்காசிறி ஊடகவியலாளர், நீர் தாரை பிரயோகத்திற்கும், கண்ணீர் புகைப் பிரயோகத்திற்கும் உள்ளாகியுள்ளார்.

தாக்குதலின் போது மயக்கமுற்ற லங்காசிறி ஊடகவியலாளர் சேகு சதகத்துல்லாவிற்கு பொலிஸார் முதலுதவி வழங்கியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அவர் பொலிஸாரினால் கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு ஓய்வு பெறுவதற்கான சந்தர்ப்பத்தையும் பொலிஸார் ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர்.

SHARE