பணக்காரனாக காதலியை 8 மாதம் நிர்வாணமாக பாதாள சிறையில் அடைப்பு

314

 

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று தான்சானியா. படித்தவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள இந்நாட்டில் மூடப்பழக்க வழக்கங்கள் அதிகளவில் இருந்து வருகிறது

இந்நிலையில் அந்நாட்டை சேர்ந்த ஒருவர் தனது காதலியை பூமிக்கடியில் குழி அமைத்து மறைத்து வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சந்தேகத்துக்குரிய நபரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது பாதாள அறையில் சிறை வைக்கப்பட்டிருந்த 20 வயது மதிக்கத்தக்க பெண்ணை அவர்கள் மீட்டனர்.

இது தொடர்பாக பெண்ணின் காதலனிடம் விசாரித்த போது, மிகவும் விரும்பும் ஒருவரை பூமிக்கு அடியில் ஒளித்து வைத்தால் பணக்காரன் ஆகலாம் என்று மந்திரவாதி ஒருவர் கூறியதால் இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வாரத்துக்கு 2 முறை மட்டுமே உணவு வழங்கப்பட்டுள்ளது. சுமார் 8 மாதங்கள் அவர் இவ்வாறு சிறை வைக்கப்பட்டுள்ளார்.

SHARE