பத்து வருடத்திற்கு பிறகு தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் கரப்பந்து அணியினருக்கு தங்கம் கிடைத்தமை மகிழ்ச்சி அளிப்பதாக இலங்கை தேசிய கரப்பந்தாட்ட அணியின் தலைவர் ஜனித சுரத் தெரிவித்துள்ளார்.
மேலும், தங்களுக்கான மேலதிக பயிற்சிக்காக இலங்கை துறைமுக அதிகார சபை விளையாட்டு கழகத்தின் ஆதரவு கிடைத்தமைக்கு மிகவும் நன்றி தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீர்கொழும்பு திம்பிரிகஸ்கமுவ பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட ஜனித சுரத் தனது அடிப்படைக் கல்வியை நீர்கொழும்பு துட்டகைமுனு மகா வித்தியாலயத்தில் கற்றதுடன் தனது உயர் கல்வியை புனித மரியாள் கல்லூரியில் கற்றுள்ளார்.
பின்னர் தனது 18 ஆவது வயதில் கரப்பந்தாட்ட குழுவில் இணைந்ததுடன்,2007 ஆம் ஆண்டு தேசிய கரப்பந்தாட்ட அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு இலங்கை தேசிய அணியின் தலைவரானார்.இதனைத் தொடர்ந்து இலங்கை துறைமுக அதிகார சபை கரப்பந்து குழுவிலும் தலைவரானார்.
இந்த நிலையில் தெற்காசிய போட்டிகளில் இலங்கை அணியினருக்கு தங்கப் பதக்கம் கிடைத்தமை தொடர்பில் இலங்கை கரப்பந்து அணியின் தலைவர் கருத்து தெரிவிக்கையில்,
அத்துடன் , நான் 2008ஆம் ஆண்டு முதல் இலங்கை துறைமுக அதிகார சபையின் கரப்பந்து குழுவில் அங்கம் வகித்து விளையாடி வதருகிறேன்.
எங்கள் துறைமுக விளையாட்டு குழு இதுவரை 3 தேசிய போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்றுள்ளது.
இந்த வெற்றியே நாம் தெற்காசிய போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு ஊன்று கோளாக அமைந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், நாங்கள் துறைமுகத்தில் சேவை செய்தாலும் கடந்த கால அரசாங்கம் எங்களது விளையாட்டுத்திறமையை ஊக்குவிக்க முன்வரவில்லை.
ஆனால், தற்போதைய அரசாங்கத்தின் துறைமுக அபிவிருத்தி அமைச்சர்.அர்ஜுண ரணதுங்க மற்றும் துறைமுக் அதிகார சபைத் தலைவர் தம்மிக ரணதுங்க ஆகியோர் எங்கள் விளையாட்டு திறமைகளை ஊக்குவிப்பதில் மிகுந்த அக்கறை காட்டுகிறார்கள்.
என தேசிய கரப்பந்தாட்ட அணியின் தலைவர் ஜனித சுரத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தப் போட்டியில் தங்கம் வெல்வதே தனது அணியினரின் ஒரே நோக்கமாக இருந்தது.
அதை பெற்றுவிட்டோம் என இறுமாப்புடன் தெரிவித்துள்ளார் இலங்கை கரப்பந்து அணியின் தலைவர் .