மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் பத்து ஹெரோயின் விற்பனை வழக்குகளில் ஆஜர் செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த பெண்ணொருவர், மீண்டும் அதே குற்றத்துக்காக கைது செய்யப்பட்டிருப்பதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளார்.
ஒரு பிள்ளையின் தாயான ‘குட்டி’ என அழைக்கப்படும் பெண் 5,100 மில்லிகிராம் ஹெரோயினுடன் இராஜகிரிய, அருயோதய மாவத்தையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்ஸார் தகவல் தெரிவிக்கின்றனர்.
மேலும் குறித்த பெண்ணின் கணவரும் ஹெரோயின் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் உள்ளார் எனவும் வெலிக்கடை பொலிஸார் நேற்று மாலை ஊடகங்களுக்குத் தெரிவித்தள்ளார்.