இந்நிலையில் அந்த இரகசிய ஆவணங்களில் இலங்கையும் உள்ளதாக ஐரிஸ் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
உலகில் பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள் என பலரும் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் பதுக்கி வைத்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த கணக்குகள் தொடர்பான தகவல்களை கொண்டு ஐரிஸ் டைம்ஸ் பத்திரிகை உலகின் இரகசிய நிறுவனங்கள் என்ற தலைப்பின் கீழ் வரைபடமொன்றை தயாரித்துள்ளது.
இதில் இலங்கையும் உள்ளடங்குவதுடன், மூன்று நிறுவனங்களுக்கு சொந்தமான மூன்று வாடிக்கையாளர்கள் மற்றும் 22 பங்குதாரர்கள் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அல்லது அவரது குடும்ப அங்கத்தவர் உட்பட உறவினர்கள் மற்றும் வேண்டப்பட்டவர்களின் பெயர்கள் குறித்த கணக்கில் உள்ளடங்குகின்றதா என உடனடியாக கண்டுபிடிக்க அரசாங்கத்தின் கவனம் திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆட்சி அதிகாரத்தில் இருந்த வேளையில், ராஜபக்ஷ குழுவினரால் பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான பணம் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி-
பனாமா ஆவணக்கசிவில் மஹிந்த குடும்பத்தாரும் சிக்கினரா ?
பனாமா ஆவணக்கசிவில் வெளியாகிய நாடுகளில் இலங்கையும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பனாமா ஆவணக்கசிவில் 11.5 மில்லியன் தகவல் தரவுகளைத் திரட்டியுள்ளதும் அது சுமார் 2.6 டெரா பயிட்களாகும்.வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் புலனாய்வில் 140 அரசியல் புள்ளிகளின் வரி ஏய்ப்பு, பண பதுக்கல் அம்பலமாக்கியிருக்கிறது.
இந்த கணக்குகள் தொடர்பான தகவல்களை கொண்டு ஐரிஸ் டைம்ஸ் பத்திரிகை உலகின் இரகசிய நிறுவனங்கள் என்ற தலைப்பின் கீழ் வரைபடமொன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது.
இதில் இலங்கையும் உள்ளடங்குவதுடன் மூன்று நிறுவனங்களுக்கு சொந்தமான மூன்று வாடிக்கையாளர்களும் , 22 பங்குதாரர்கள் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரகசிய கணக்குகள் தொடர்பான தகவல்கள் வெளியானதையடுத்து இந்தியா,அவுஸ்திரேலியா மற்றும் பல நாடுகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அல்லது அவரது குடும்ப அங்கத்தவர் உட்பட உறவினர்கள் பெயர்கள் குறித்த கணக்கில் உள்ளடங்குகின்றதா என்று கண்டுபிடிக்க அரசாங்கத்தின் கவனம் திரும்பியுள்ளதாக தெரியவருகிறது