
பப்பாளியில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம், வைட்டமின் சி, ஏ என்று பல்வேறு சத்துகள் உள்ளன. எனவே, அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. பப்பாளியை உண்பதால் கீழ்வரும் நன்மைகள் கிடைப்பதாக மருத்துவ நூல்கள் கூறுகின்றன. அதன் விவரம் வருமாறு:-
* உடல் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் உதவும்.
* குழந்கைளின் பல், எலும்பு வளர்ச்சிக்கு மிக நல்லது.
* ஈரல், கல்லீரலின் அழற்சியை போக்கும். ஈரலின் வீக்கங்களை சரி செய்யும்.
* வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால் கண் பார்வைக்கு மிகவும் நல்லது
* மலச்சிக்கலை போக்கும்.
* ரத்தத்தை விருத்தி செய்யும்.
* பப்பாளிக்காயை சமைத்துண்ண தாய்மார்களுக்கு தாய்ப்பால் பெருகும்.
* தேள் கொட்டிய இடத்தில் பப்பாளிக்காய் பிசினை தடவ வலி குறையும் என சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.