பெங்களூரில் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம் 13 நிமிடத்தில் குறித்த மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ள சம்பவம் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.
பெங்களூர் நகரில் புற்றுநோய் சிறப்பு மருத்துவமனயைில் இருந்து எம்.எஸ்.ராமையா மருத்துவமனைக்கு இன்று மாலை மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம் எடுத்துச் செல்லப்படுவதாக பொலிசார் தெரிவித்திருந்தனர். இதற்காக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் பொலிசார் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
என்.ஆர் சந்திப்பு, கே.ஜி.ரோடு, மைசூரு பேங்க் சர்க்கிள், பழைய ஹைகிரவுண்ட் சாலை, சி.வி.ரமணன் ரோடு வழியாக எம்.எஸ்.ராமையா மருத்துவமனைக்கு இதயம் கொண்டு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பொலிசார் மேற்கொண்டிருந்தனர்.
அதன்படி இன்று மாலை 5.45 மணி முதல் 6.45 மணி வரை அந்த வழியில் உள்ள அனைத்து சிக்னல்களிலும் ஒரே நேரத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து புற்றுநோய் சிறப்பு மருத்துவமனயைில் இருந்து புறப்பட்ட ஆம்புலன்ஸ் 12.45 நிமிடத்தில் எம்.எஸ்.ராமையா மருத்துவமனையை அடைந்தது.
இதற்காக ஒத்துழைத்த பொதுமக்களுக்கு பெங்களூர் போலீசார் நன்றி தெரிவித்துக்கொண்டனர். வாகன நெரிசல் நிறைந்த மாலை நேரத்தில் இதயம் ஆம்புலன்சில் எடுத்துச்செல்லப்பட்டது அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.