பரித்தித்துறையில் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் பற்றிக் உற்பத்தி நிலையம் – வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சரின் விசேட அழைப்பின் பேரில் திறந்து வைத்தார் வடக்கு முதல்வர்…..
யாழ்ப்பாணம் பரித்தித்துறை தும்பளை தெற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் முயற்சியால் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சரின் பணிப்புரைக்கு அமைவாக வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் சுமார் 18 இலட்சம் நிதியுதவியுடன் மக்கள் பங்களிப்போடு அமைக்கப்பட்ட பற்றிக் உற்பத்தி நிலையத்தை 15-03-2015 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில் வடக்கு மாகாண மீன்பிடி, கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களின் விசேட அழைப்பின் பேரில் வடக்கு மாகாண முதலமைச்சர் உயர் திரு சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் திறந்து மக்கள் பாவனைக்கு வழங்கினார்.
நிகழ்விற்கு வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான திரு.சுகிர்தன், திரு.கஜதீபன், திரு.சர்வேஸ்வரன் ஆகியோரும், மீன்பிடி போக்குவரத்து கிராம அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.ஆர்.வரதீஸ்வரன் அவர்களும் பரித்தித்துறை பிரதேச செயலாளர், வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் திரு.ஜே.ஜே.பெலிசியன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.