நேற்றைய தினம் இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சைக்கு சென்ற மாணவன் ஒருவனைக் காணவில்லை என மாணவனின் பெற்றோர் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் நுவரெலியா – நோர்வூட் பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
சிறுவன் தன்னுடைய மூத்த சகோதரியுடன் நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு புலமைப்பரிசில் பரீட்சை நிமித்தம் சென்றதாகவும், அதன் பின்னரே காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.