பலாங்­கொடை முல்­கம பிர­தே­சத்தில் தனது மூன்­றா­வது காத­லனைக் கொலை செய்த குற்­றத்­துக்­காக பெண் ஒரு­வ­ரையும் அவ­ரது இரண்­டா­வது காத­ல­னையும் பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

178

பலாங்­கொடை முல்­கம பிர­தே­சத்தில் தனது மூன்­றா­வது காத­லனைக் கொலை செய்த குற்­றத்­துக்­காக பெண் ஒரு­வ­ரையும் அவ­ரது இரண்­டா­வது காத­ல­னையும் பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

இது தொடர்பில் தெரிய வரு­வ­தா­வது, அப்பெண் தனது கணவன் உயி­ரி­ழந்த பின்னர் மேலும் இரு­வ­ருடன் காதல் தொடர்­பினை பேணி வந்த அவர் கொலை செய்­யப்­பட்ட நப­ருடன் நான்­கா­வ­தாக காதல் தொடர்பை பேணி வந்­துள்ளார்.

இப்பெண் தான் செலுத்தி வந்த, தனக்கு சொந்­த­மான முச்­சக்­கர வண்­டியை அடகு வைத்­தி­ருந்த நிலையில் நீண்­ட­காலம் ஆனதால் அடகு வைத்த முச்­சக்­க­ர­வண்­டியை ஏலத்தில் விடப்­போ­வ­தாக வங்­கியின் அறி­வித்­த­லை­ய­டுத்து, அதனை மீட்­ப­தற்­கான பணத்­தினை தேடி அழைந்­துள்ளார்.

ஏற்­க­னவே திரு­ம­ண­மாகி இரண்டு பிள்­ளை­களின் தந்­தை­யான, உயி­ரி­ழந்த நப­ரிடம் அதி­க­ளவு நகைகள் காணப்­பட்­டுள்­ளன. தனது முச்­சக்­க­ர­வண்­டி­யினை மீட்­ப­தற்கு தனது காத­லனின் நகை­களை அடகு வைத்து பணம் புரட்­டு­வ­தற்கு சந்­தேக நப­ரான பெண் திட்­ட­மிட்­டுள்ளார்.

அதன்­படி இவ்­வி­ரு­வரும் பலாங்­கொடை, முல்­க­ம­வி­லுள்ள காட்­டுப்­ப­குதி ஒன்றில் இர­க­சிய சந்­திப்பில் ஈடு­ப­டு­வ­துடன் பாலியல் உறவில் ஈடு­பட்டு வந்­துள்­ள­தாக விசா­ர­ணை­களில் தெரிய வந்­துள்­ளது.

தனக்கு ஏற்­பட்­டுள்ள பணத்­தே­வைக்­காக நகை­களை தரும்­படி மூன்­றா­வது காத­ல­னுக்கு தெரி­வித்­த­தோடு, அந்­ந­கை­க­ளுடன் முல்­கம காட்­டுப்­ப­கு­திக்கு வரு­மாறு அழைத்­துள்ளார்.

வழ­மை­போன்ற செயற்­பா­டு­க­ளுக்­காக காதலி அழைப்­ப­தாக நினைத்து உயி­ரி­ழந்த நபர் நகை­க­ளுடன் முல்­கம காட்­டுப்­ப­கு­திக்கு கடந்த ஆகஸ்ட் 16 ஆம் திகதி சென்­றுள்ளார்.

அப்­போது குறித்த பெண், தான் ஆடை­களை கழற்ற வேண்டும். ஆகவே நீங்கள் கண்­களை மூடிக்­கொள்­ளுங்கள் என்­று
கா­த­ல­னிடம் கூறி­யுள்ளார்.

அவர் கூறி­யதை போன்று நம்பி அவரும் கண்­களை மூடி­யதன் பின்னர் தான் மறைத்து வைத்­தி­ருந்த கைக்­கோ­ட­ரி­யினால் அவரை தாக்கி கொலை செய்­து­விட்டு, உயி­ரி­ழந்­த­வரின் கைச்­சங்­கிலி, தங்­கச்­சங்­கிலி மற்றும் கைத்­தொ­லை­பேசி என்­ப­வற்றை அப­க­ரித்துக் கொண்டு சென்­றுள்ளார்.

பின்னர் அவற்றை அடகு வைத்து முச்­சக்­க­ர­வண்­டியை மீட்­டுள்ளார். இதே­வேளை, கொலை­யுண்ட நபரின் தொலை­பேசி அழைப்­பு­களை வைத்து சந்­தே­க­ந­ப­ரான பெண்ணை பொலிஸார் கைது செய்­த­தோடு வாக்­கு­மூ­லத்தை பெற்­றுள்­ளனர்.

அத்­துடன், இப்­பெண்ணின் இரண்­டா­வது காத­லனும் சந்­தே­கத்தில் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.dath-life

SHARE