பலாங்கொடை முல்கம பிரதேசத்தில் தனது மூன்றாவது காதலனைக் கொலை செய்த குற்றத்துக்காக பெண் ஒருவரையும் அவரது இரண்டாவது காதலனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பில் தெரிய வருவதாவது, அப்பெண் தனது கணவன் உயிரிழந்த பின்னர் மேலும் இருவருடன் காதல் தொடர்பினை பேணி வந்த அவர் கொலை செய்யப்பட்ட நபருடன் நான்காவதாக காதல் தொடர்பை பேணி வந்துள்ளார்.
இப்பெண் தான் செலுத்தி வந்த, தனக்கு சொந்தமான முச்சக்கர வண்டியை அடகு வைத்திருந்த நிலையில் நீண்டகாலம் ஆனதால் அடகு வைத்த முச்சக்கரவண்டியை ஏலத்தில் விடப்போவதாக வங்கியின் அறிவித்தலையடுத்து, அதனை மீட்பதற்கான பணத்தினை தேடி அழைந்துள்ளார்.
ஏற்கனவே திருமணமாகி இரண்டு பிள்ளைகளின் தந்தையான, உயிரிழந்த நபரிடம் அதிகளவு நகைகள் காணப்பட்டுள்ளன. தனது முச்சக்கரவண்டியினை மீட்பதற்கு தனது காதலனின் நகைகளை அடகு வைத்து பணம் புரட்டுவதற்கு சந்தேக நபரான பெண் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி இவ்விருவரும் பலாங்கொடை, முல்கமவிலுள்ள காட்டுப்பகுதி ஒன்றில் இரகசிய சந்திப்பில் ஈடுபடுவதுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
தனக்கு ஏற்பட்டுள்ள பணத்தேவைக்காக நகைகளை தரும்படி மூன்றாவது காதலனுக்கு தெரிவித்ததோடு, அந்நகைகளுடன் முல்கம காட்டுப்பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார்.
வழமைபோன்ற செயற்பாடுகளுக்காக காதலி அழைப்பதாக நினைத்து உயிரிழந்த நபர் நகைகளுடன் முல்கம காட்டுப்பகுதிக்கு கடந்த ஆகஸ்ட் 16 ஆம் திகதி சென்றுள்ளார்.
அப்போது குறித்த பெண், தான் ஆடைகளை கழற்ற வேண்டும். ஆகவே நீங்கள் கண்களை மூடிக்கொள்ளுங்கள் என்று
காதலனிடம் கூறியுள்ளார்.
அவர் கூறியதை போன்று நம்பி அவரும் கண்களை மூடியதன் பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கைக்கோடரியினால் அவரை தாக்கி கொலை செய்துவிட்டு, உயிரிழந்தவரின் கைச்சங்கிலி, தங்கச்சங்கிலி மற்றும் கைத்தொலைபேசி என்பவற்றை அபகரித்துக் கொண்டு சென்றுள்ளார்.
பின்னர் அவற்றை அடகு வைத்து முச்சக்கரவண்டியை மீட்டுள்ளார். இதேவேளை, கொலையுண்ட நபரின் தொலைபேசி அழைப்புகளை வைத்து சந்தேகநபரான பெண்ணை பொலிஸார் கைது செய்ததோடு வாக்குமூலத்தை பெற்றுள்ளனர்.
அத்துடன், இப்பெண்ணின் இரண்டாவது காதலனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.