பளை இயக்கச்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிவபூமி நாய்கள் பராமரிப்பு நிலையம்

140

வீதிகளில் கட்டாக்காலி நாய்களாக திரியும் நாய்களை பராமரிக்கும் நோக்குடன் நாய்கள் சரணாலயம் திறந்து வைக்கப்படவுள்ளது.

பளை இயக்கச்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிவபூமி நாய்கள் பராமரிப்பு நிலையம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 4 வடமாகாண ஆளூநர் கலாநிதி சுரேன் ராகவனால் திறந்து வைக்கப்படவுள்ளது.

செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலர் அ. அருமை நாயகம் , யாழ்.மாவட்ட செயலர் நா. வேதநாயகன் , வடமாகாண ஆளுனரின் செயலாளர் இ. இளங்கோவன் , பளை பிரதேச செயலர் திருமதி. ப. ஜெயராணி,  பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சு. சுரேன் மற்றும் சரணாலயம் நிலத்தினை அன்பளிப்பு செய்த செல்வி. பே. ரோகினி ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்.

SHARE