தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் உள்ளனர். ஒவ்வொருதருக்கும் ஒரு அடையாளம் சொல்லலாம், ஆனால் பெயரிலேயே எல்லோரின் நியாபகத்திற்கு வருபவர் பவர்ஸ்டார் சீனிவாசன்.
இவர் எப்படி, என்னென்ன படங்கள் நடித்துள்ளார் என்றால் எல்லோருக்கும் தெளிவாக தெரியும்.
தற்போது இவரை பற்றி ஒரு பரபரப்பு தகவல். அதாவது இவரை நீண்டநாட்களாக காணவில்லையாம், இதனால் அவரது மனைவி கண்ணீருடன் போலீசில் புகார் அளித்துள்ளார். அண்ணாநகர் காவல் நிலைய போலீசார் அவரின் புகாரை ஏற்று நடவடிக்கையில் உள்ளனர்.