பஸ்ஸிற்குல் புகுந்த மூங்கில்; மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்

141

நோட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில் எடிட் பகுயிதில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் இருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் லக்ஷபான பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபபட்டுள்ளனர்.

நோட்டன் பகுதியிலிருந்து பயணித்த இ.போ.சபைக்கு சொந்தமான பஸ் மீது எடிட் பிரதேசத்தில் மூங்கில் ஒன்று சரிந்து விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பஸ் மீது சரிந்து விழ்ந்த மூங்கில்கள் பேரூந்தின் முன் பகுதி கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு மூங்கில் உள்நுழைந்ததால் இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

பலத்த காற்று வீசுகின்ற இந்த வேளையில் பிரதான வீதியின் அருகில் உள்ள மூங்கில் தோப்பு ஒன்றே இவ்வாறு சரிந்து பஸ் மீது விழுந்துள்ளதாக நோட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

SHARE