பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து ; ஒருவர் பலி, 27 பேர் காயம்

84

பஸ் வண்டியொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் பதுளை – அலுகொல்ல பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்வண்டியே பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த 27 பேர் வைத்தியலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துத் தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE