பாகுபலி நாயகன் ரூ 15 லட்சம் நிவாரண நிதி அறிவிப்பு

303

பாகுபலி நாயகன் ரூ 15 லட்சம் நிவாரண நிதி அறிவிப்பு - Cineulagam

தமிழக தலைநகர் சென்னை உட்பட பல கடலோர மாவட்டங்களை புரட்டிப் போட்ட மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தமிழ் நடிகர்கள் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாள நடிகர்களுக்கும் முன்வந்துள்ளனர்.

டோலிவுட்டின் பிரபல நடிகர்களான அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு, ஜுனியர் என்.டி.ஆர், கல்யாண் ராம், சாய் தரண் தேஜ், வருன் தேஜ் என பலரும் தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியை அறிவித்துள்ளனர்.

பாகுபலி படத்தின் வாயிலாக புகழ் பெற்ற அப்படத்தின் நாயகன் பிரபாஸிற்கு தமிழகத்தில் அனேக ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் பாகுபலி நாயகன் பிரபாஸ் தமிழகத்திற்கு நிவாரண நிதியாக ரூ.15 லட்சம் வழங்க முன்வந்துள்ளார். பிரபாஸ் தற்போது பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்காக தன்னை தயார்படுத்தி வருகின்றார்.

SHARE