பாடசாலை செல்ல வேண்டிய வயதில் குடும்பம் நடத்திய சிறுவர்கள் கைது

253

மூதூர் கடற்கரைச்சேனை கிராமத்தில் உள்ள கோயிலில் சம்பிரதாயபூர்வமாக திருமணம் செய்துகொண்ட சிறுவனையும் சிறுமியையும் பொலிஸார் நேற்று கைது செய்து மூதூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

இதன்போது, சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் குறித்த சிறுவனை 1 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையிலும் செல்வதற்கும் நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.

திருமணம் செய்த சிறுவன் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிறிணிவாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த 14 வயதானவர் எனவும் சிறுமி மூதூர் – கடற்கரைச் சேனை கிராமத்தைச் சேர்ந்த 14 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் இருவரும் கடந்த  2015.12.24ஆம் திகதி திருமணம் செய்துள்ளனர்.

இவ்வாறு சிறுவர்கள் இருவர் திருமணம் செய்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே கடந்த திங்கட்கிழமை இவர்களை பொலிஸார் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி சம்பவம் தொடர்பில் பெற்றோருக்கு தொடர்பிருக்கின்றதா என்பது தொடர்பிலும் மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

SHARE