பாதையைப் புனரமைக்கக்கோரி பொகவந்தலாவையில் ஆர்ப்பாட்டம்

518

பாதையை புனரமைக்கக்கோரி பொகவந்தலாவ கிவ் தோட்டத் தொழிலாளர்கள் பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொகவந்தலாவ அட்டன் பிரதான பாதையின் சென்ஜேன்டிலரி சந்தியிலே 28.09.2016 அன்று காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

சென்ஜேன்டிலரி சந்தியிலிருந்து கிவ் தோட்டத்திற்குச் செல்லும் பிரதான பாதையை புனரமைத்துத்தரக்கோரியே ஆர்ப்பாட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.

பாதையை மறித்து டயர் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையினால் சுமார் அரை மணித்தியாலங்கள் வரை போக்குவரத்து தடைப்பட்டது.

நீண்டகாலமாக புனரமைக்கப்படாத 8 கிலோ மீட்டர் தூரம் வரையிலான பாதை குன்றும் குழியுமாகக் காணப்படுவதனால் பாடசாலை மாணவர்களும், நோயாளர்களும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் போக்குவரத்து சேவையும் இடம்பெறுவதில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்ததுடன், தோட்ட நிர்வாகமும் பாதையைப் புனரமைக்க முன்வராத நிலையில் அரசியல்வாதிகள் குறித்த பாதையைப் புனரமைத்துத்தருமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
தகவலும் படங்களும்:-

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

unnamed-2

unnamed-3

unnamed

 

SHARE