தமிழ் சினிமாவின் ஜாம்பவான் பாரதிராஜாவின் கனவுப்படம்குற்றப்பரம்பரை.
இப்படத்தை பாலா இயக்க விரும்பியதால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.இந்நிலையில் நேற்று முன்தினம் பாரதிராஜா 50 இயக்குனர்களுடன் மதுரைக்கு சென்று உண்மைச்சம்பவத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி குற்றப்பரம்பரை படத்தின் படப்பிடிப்பை தொடங்கிவிட்டார்.
இந்நிகழ்வில் சீமான், ஆர்கே. செல்வமணி உட்பட பலரும் பாரதிராஜாவை பற்றி புகழ்ந்து பேசினர்.
படத்தின் எழுத்தாளரான ரத்னகுமார் பேசுகையில், படத்திற்குபிதாமகன் என்று பெயர் வைத்தால் மட்டும் போதாது. பிதாமகனை மதிக்க தெரிய வேண்டும், தமிழ் சினிமாவின் உண்மையான பிதாமகன் பாரதிராஜா தான். முடிந்தால் அவரிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்துக் கொள்ளுங்கள் என்று பாலாவை சீண்டியுள்ளார்.