முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை செய்யப்பட்ட வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் நீதிமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் நாலா புறமும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு, பிரச்சினைகள் ஏற்படுமிடத்து அதை தடுப்பதற்காக அனைவரும் தயார் நிலையில் உள்ளனர்.
இந்த வழக்கின் பிரதான சந்தேகநபரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிராக 17 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கின் பிரதிவாதிகளான 13 பேரும் துமிந்த சில்வாவும் நீதிமன்றிற்கு வருகைத் தந்துள்ளனர்.
பாரத லக்ஸ்மனின் மகளான ஹிருணிகா பிரேமசந்திரவும் நீதிமன்றிற்கு வருகைத்தந்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி அங்கொட பிரதேசத்தில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.