பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ள வருடாந்த அறிக்கைகள் மற்றும் செயற்பாட்டு அறிக்கைகள் தற்போது மென் பிரதிகளில் சமர்ப்பிக்கப்படுவதாக சபாநாயகர் இன்று சபைக்கு அறிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் தேவைக்கேற்ப பயன்படுத்தப்படும் வகையில் குறித்த அறிக்கைகளின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிரதிகளை சபை மற்றும் நூலகத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்தார்.
02.06.2022 அன்று நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இது மேற்கொள்ளப்படுவதாக சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.