பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு

307

இடம்பெயர்ந்தோர் தங்கி உள்ள நலன்புரி முகாம்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் நேரில் வரவேண்டும் என நலன்புரி நிலையங்களில் வசிக்கும் மக்கள் சார்பாக அழைப்பு விடுப்பதாக இடம்பெயர்ந்த மக்கள் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை யாழ்.ரில்கோ விருந்தனர் விடுதியில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தொடர்பான விஷேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

எங்கள் முகாம்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் நேரில் வந்து பார்வையிட வேண்டும் அப்போது தான் நாங்கள் முகாம் களில் படும் கஷ்டங்கள் அவர்களுக்கு புரியும்.

நாங்கள் அவர்களை வந்து சந்திக்கும் போது அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் அவர்கள் எங்களை மதிக்க வேண்டும் என்பதற்காகவும் வெள்ளை சேட்டு வெள்ளை வேட்டியோடு செல்வதனால் அவர்களுக்கு எமது கஷ்டங்கள் புரியவில்லை.

அவர்கள் எங்கள் முகாம்களுக்கு வந்து எங்கள் வீடுகளுக்கு வந்தாலே எமது கஷ்டங்களை பார்க்க முடியும் என தெரிவித்தார்.

SHARE