பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ரபெல் நடால்

288
625.117.560.350.160.300.053.800.210.160.70 (3)

பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

ஸ்பெயினில் நடந்த பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில், 14 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால்- நடப்பு சாம்பியனான நிஷிகோரி (ஜப்பான்) மோதினர்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த ரபெல் நடால் 6-4, 7-5 என்ற நேர்செட்டில் நிஷிகோரியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். ரபெல் நடால் இந்தப் பட்டத்தை 9வது முறையாக வென்றுள்ளார்.

மேலும், களிமண் தரையில் நடந்த போட்டியில் ரபெல் நடால் வென்ற 49வது பட்டம் இதுவாகும். இதன் மூலம் களிமண் தரையில் அதிக பட்டம் வென்ற அர்ஜென்டினாவை சேர்ந்த குல்லெர்மோ விலாஸ்சின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

SHARE